கூந்தல் கொண்ட காளை அவள் அம்மா

@
நான் ராசாவா வாழத்தான்
வேலைக்காரியா போயிருந்தாள்
அவள் பெயரில் மட்டும் ராணியாக
இருக்கிறாள்

@
என் அலைபேசியில் வரும்
பெண்களின் பெயரை படிக்கும் அளவுக்கு
ஆங்கிலம் கற்றவள்

@
தண்ணீர் கொடத்துல நான் இருக்க
தண்ணீர் கொடுத்த தலையில்
சுமந்தாள்

@
கடன் வாங்கியே கடன் கொடுப்பாள்
மகனா நான் இருந்தாலு
மகளாத்தான் என்ன வளக்குறா

@
காக்கைக்கு சோறுவைப்பாள்
விருந்தாளிக்கு விருந்து வைப்பாள்
அவள் மட்டும் சாப்பிட மறப்பாள்

@
அப்பன் விட்டு சென்ற பின்னே
கூந்தல் கொண்ட காளை ஆனாள்
எங்களை வான் சேர்க்க இறகானாள்

எழுதியவர் : பன்னீர் கார்க்கி (31-Jul-18, 2:41 pm)
பார்வை : 363

மேலே