கவிஞன் நான்

கவிஞன் நான் -என்
கண்ணால் பார்க்கும்
என்னென்னவோ காட்சிகளுக்கு
கற்பனையில் வடிவம் தருகிறேன்
நயம்மிகு சொற்களால் ஜோடித்து
கவிதையாய் ................
வான் நிலவை, பெண்ணை,
மலர்களை,மலைகளை,நதியை
இன்னும் என் கண்ணால் பார்க்க
முடியா அந்த இறைவனையும்
என் கவிதைக்கு வடிவம்தர முடியும்
நான் கவிஞன், கலைஞன்
எழுத்து சிற்பி ...........நாளையை
இன்றே அறியவைக்கும் என்
கவிதை வரிகள் என்னை ஓர்
ஞானியாக்கும் ..........ஏன் ஏன்
ஏன் கவிதையில் அழகு சந்தங்கள்
படிக்கும்போதே இசை எழுப்பிடுமே
என்னை அறியாது என்னை ஒரு
இசை ஞானியை ஆக்கிடுமே
இன்னும் என்னவேண்டும்
கவிஞன் எனக்கு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (31-Jul-18, 5:28 pm)
Tanglish : kavingan naan
பார்வை : 527

மேலே