நட்பு

நண்பனே.....
நீ என் உறவுமல்ல
உதிரமுமல்ல ..ஆனால்
நீ என் உரம்
யார் அறிவார்
மன அழுத்தத்தின்
மருந்தென்று நீ...
பலமுறை கோபம் எனும் கானல்நீரை
நாம் மாறிமாறி
ஊற்றினாலும்
நீரை வளமாக்கி
கானலை கழிவாக்கி
வாடாமல் வளர்ந்து
நிற்கும் பூவல்லவா
நம்.....நட்பூ
💖💖 தயா......✍💖💖

எழுதியவர் : உலையூர் தயா (5-Aug-18, 11:35 am)
Tanglish : natpu
பார்வை : 828

மேலே