வானவில் கலைந்த போது

வானவில்லை ரசித்து நின்ற
முகில்கூட்டம்
பொழிய மறந்தது !
வானவில் கலைந்த போது
வருந்திய முகில்கள்
கண்ணீர் உகுத்தது !
மழை என்று கொண்டாடுகிறது
ரசனையற்ற மனித கூட்டம் !

எழுதியவர் : கவின் சாரலன் (11-Aug-18, 8:58 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 429

மேலே