கனவில் வந்த கன்னிமயில்
என் கனவில் பல இரவுகள்
வந்து நின்றாள் ஒருத்தி,
அச்சம், நாணம்,மடமை ,பயிர்ப்பு
என்ற பெண்ணிற்கே உரித்தான
அழகின் தனி இலக்கணத்தை
ஆபரணமாக அணிந்து , அவள்
நாணி நாணி மெல்ல மெல்ல
மேனியும் சற்று நடுங்கி என்மேல்
பார்வை தொடுக்க என்னை மயக்க
நானும் அப்பெண் மானைத் தொட்டுவிட
முனைய துள்ளி தூரப்போய் நின்ற அம்மான்,
அன்னம்போல் நடை நடந்து சென்று,
நான் பார்த்துக்கொண்டே இருக்கையில்
இவளென்ன சிலையாய்ப்போன கலாப மயிலா
என்பதுபோல் காட்சியும் தந்து மறைகின்றாளே
யாரிவள்.........யாரிவள்....என்று எண்ணவைத்தது கனவு......
இதோ என் எதிரில் நிற்கின்றாள் பாவை விளக்காய்
ஒளிவீசும் காந்த கண்களுடன் என் அத்தையின் பின்னாலே
என் அத்தை மகள் , நேற்றைய சிறுமி அவள் ....இன்று
என்னையே அசத்திடும் வனப்பில் என்முன்னே நிற்கின்றாள்
வண்ணக்கிளியாய்,எழிலாய், கன்னிமயிலாய் , என் கனவில்
வந்து வந்துபோன துள்ளும் பொன்மானாய் ......
என் அத்தைமகள் மலர்க்கொடியே இவள் .....அன்று
என்னை சுற்றி சுற்றி வந்த சிட்டுக்குருவி ...இன்று
பூத்துக்குலுங்கும் கன்னிப்பெண் ......நாளை என்மனைவி .