உன் நினைவுத் தென்றலின்
மூடித் திறக்குது வானம்
மூடிய இதழ்களைத் திறக்குது மலர்
ஓடி வந்த தென்றலுக்கு
வானில் குளிர் முகிலின் தழுவல்
சோலையில் மலர் மென்மையின் தழுவல்
முகில் சூழ்ந்த வானில் மலர்ச் சோலையில்
என் கவிதை நெஞ்சிற்கு உன் நினைவுத் தென்றலின் தழுவல் !