ஏன் இந்த முரண்
ஏன் இந்த முரண்
திருடுபோன பணத்திற்காக
தீக்காயம் பட்ட குரங்குபோல்
பதறுகின்ற மனம்
திருடிவந்த பணத்தை
தீங்கென்று கருதாமல்
பச்சோந்தியாய் நிறம்மாறும்
உதிரப்பட்ட வசை வார்த்தைகளின்
காயங்களை கிளறி
சீற்றம் கொள்ளும் சிங்கமனம்
உதிர்த்த வார்த்தைகளின்
வலி அறியாமல்
மறந்து தூங்கும் நரிகள்
பெற்றவனிடம் காட்டும்
பாங்கை
கொடுத்தவனிடம் காட்ட
தவறிவிடுகிறது
எதிர்வீட்டின் துன்பத்தை
சாமி குற்றம் என சொல்லி
தன் வீட்டின் துன்பத்தில்
கண்ணில்லை சாமிக்கு என்று
காரணம் சொல்கிறது
புதிருக்கு விடை தெரியா சாமி
பூலோகம் வர மறுக்கிறது