சுதந்திரதாகம்
கார்பரேட்
கம்பெனிகளால்
களவாடப்பட்டது
இயற்கை வளம்.!
உச்ச நீதிமன்ற
தீர்ப்பினால்
களவாடப்பட்டது
கலாச்சாரம்.!
மதவாதிகளால்
களவாடப்பட்டது
சகோதரத்துவம்.!
அரசியல்வாதிகளால்
களவாடப்பட்டது
சுதந்திரம்.!
சுதந்திர நாடுதான்
ஆனாலும் இன்னும்
தனியவில்லை
சுதந்திரதாகம்.!!