வலி
எதுவும் தோன்றாத மனநிலை
சிந்தனை எல்லாம் உன் மீது வைத்து
கண் முன் இருள் போர்த்தி
அமர்ந்திருக்கிறேன்
கண்ணீர் வடிக்கும் பனி கட்டியாய்
துகள் விழுந்து வீம்பும் கண்களை போல
சிவந்த கருவிழியை பின்பம் காட்டுதடி
உன் அருகில் இருக்க ஆசை
எதை எதையோ சிந்திக்கின்றது மனது
உன்னை ஒரு முறை பார்க்க ஆவல்
உன் நலனை அருகில் இருந்து கவனிக்க ஆசை