காதல்
கண்ணே, கண்ணே ,பார்வையால்
எங்களை சேர்த்துவைத்த நீ ஏன் ,
இன்னும் மனதோடு எங்களை
சேர்க்க மறந்தாய் , இன்னும்
அவள் மனம் திறந்து
'உன்னை நான் காதலிக்கிறேன்'
என்று கூறவில்லையே -இப்படி
அறிமுகம் பார்வையோடு நின்றுவிட்டால்
என் மனம் பாடுபடுமே அறியாயோ நீ
அது அவளையே நினைத்து பித்தாய்
அலைகிறதே பார்த்த அந்த நாள் முதல் .