மலர்ரோஜா மொட்டையவள் மெல்லத் தொட

தென்றல் வருடியும்பூ மொட்டு மலரவில்லை
மூடிக் கிடந்ததுரோ ஜா

மலர்ரோஜா மொட்டையவள் மெல்லத் தொடவும்
மலரும் சிலிர்த்து மகிழ்ந்து மலர்ந்தது
மெல்லிய பூவிரல் மாயம்என் செய்ததோ
பிங்க்நிற பேரழகுப் பூவை நுகர்ந்தபோது
மங்கையே சூடாயோ மாமலரை என்றதுபூ
திங்களதைச் சூடிநடந் தாள்

---குறட்பா பஃறொடை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (30-Apr-24, 6:34 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 23

மேலே