மனிதரின் குணம்

மனிதரின் குணம்
நேரத்திற்கேற்றவாறு
வேறுபடும்;

ஒருவரைத் 'தூண்டித் துருவிக்' கேட்டால்,
பின்னணியில் சில உண்மைகள்
வெளிவரும்;

ஒவ்வொரு 'அற்புதத்தின்'
பின்னணியில் சிறிதளவாவது
அறிந்து கொள்ளும் ஆர்வம் இருக்கும்;

'எனக்குத் தெரியவே தெரியாது'
என்றொருவர் சொன்னால்
பின்னணியில் அவருக்கும் ஏதோ
கொஞ்சம் தெரிந்திருக்கிறது.

'நான் கவலைப்படப் போவதில்லை'
என்றொருவர் சொன்னால்
பின்னணியில் ஓர் உணர்ச்சிக்
கொந்தளிப்பு உண்டு.

மனிதரின் குணம்
நேரத்திற்கேற்றவாறு
வேறுபடும்.

2015 ல் மரபுக் கவிதை

மனிதரின் குணம் - நிலைமண்டில ஆசிரியப்பா

மனிதரின் குணம்நே ரத்திற்(கு) ஏற்றபடி
இனியும் வேறு படுமாம்; ஒருவரைத்
'தூண்டித் துருவிக்' கேட்டால், பின்னணியில்
வேண்டிய உண்மைகள் சிலவெளி வருமே! 1

ஒவ்வொரு 'அற்புதத் தின்'பின் னணியில்
எவ்வாறு சிறிதள வாவத றிந்து
கொள்ளும் ஆர்வம் இருக்குமோ அறிந்து
கொள்ள முயற்சிப் பதுதவ றன்றே! 2

'எனக்குமே தெரியவே தெரியா தென்றவர்
சொன்னால் பின்னணி யிலவருக் குமேதோ
கொஞ்சம் தெரிந்திருக் கிறது; இன்னும்
கொஞ்சம் தெரிவதில் தவறொன் றில்லையே! 3

'நான்கவ லைப்படப் போவ தில்லை'
என்றொரு வர்சொன் னால்பின் னணியிலே
உணர்ச்சிக் கொந்தளிப் புடன்மனி தகுணமும்
நேரத் திற்கேற் றபடிவே றுபடுமே! 4

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Oct-18, 10:31 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 110

மேலே