முத்தே மணியே

முத்தே மணியே கண்ணே ஒளியே
முல்லைப் பூவே கண்ணுறங்கு !
அத்தை மடியே மெத்தை யாக
அழகு மயிலே நீயுறங்கு !
நித்தம் நடக்கும் அவலம் கண்டால்
நெஞ்சம் கொதிக்கும் பாராதே !
சத்த மின்றித் தோளில் சாய்த்துத்
தட்டிக் கொடுப்பேன் பொன்னுறங்கு !!

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (9-Oct-18, 1:27 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
Tanglish : muththe maniyae
பார்வை : 117

மேலே