அன்பே உன்னிடம் பிடித்தது

நித்தம் நித்தம் நீ சொல்லும் பொய்கள் பிடிக்கும்
பொய் சென்னா பின்பு இமை அடிக்கும் கண்கள் பிடிக்கும்
உன் இதழ் பட்ட தேநீர் கோப்பை ரொம்ப பிடிக்கும்
அதில் ஒட்டி உள்ள உதட்டு சாயம் தொட்டு பார்க்க பிடிக்கும்
அருகில் நான் இல்லையென்று என்னும் எண்ணம் பிடிக்கும்
என்னை கண்டவுடன் சிவக்கும் உந்தன் கன்னம் பிடிக்கும்
நீ கோவப்பட்டு திட்டுகின்ற வார்த்தை பிடிக்கும்
நீ கொஞ்சி கொஞ்சி பேசுகின்ற சொற்கள் இனிக்கும்
உன் இடைக்கு உடையாக மாற பிடிக்கும்
உன் அழகை சுற்றும் சேலையாக வாழ பிடிக்கும்
உன் எண்ணத்தில் சோலையாக ஆள பிடிக்கும்
உன் கழுத்தில் நித்தம் முத்தம் தரும் தோடாய் மாற பிடிக்கும்
உன் பின்னழகை நித்தம் தொடும் ஜடையாய் மாற பிடிக்கும்
நீ தூங்கும் போது போர்வையாக மாற பிடிக்கும்
உன் உடல் முழுவதும் வியர்வையாக ஓட பிடிக்கும்
நீ தூங்கும் போது குவிகின்ற இதழ் பிடிக்கும்
அந்த குவியத்தில் கூடு கட்டி வாழ பிடிக்கும்

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (9-Oct-18, 10:07 am)
பார்வை : 647

மேலே