மனமெனும் மாயை

சிரிக்கும்
சிலாகிக்கும்
சிலிர்க்க வைக்கும் .....

நடிக்கும்
நடனமாடும்
நம்ப வைக்கும் .....

வலிக்கும்
வழி தரும்
வாரி விடும் ....

கொடுக்கும்
கொடுமை செய்யும்
கொந்தளிக்கும் ...

அழும்
அழ வைக்கும்
ஆறுதல் தரும் ...

சில நேரங்களில்
சந்தோச சாரலில்
சாதுர்யமாய் சாதம் ஊட்டும் ...

பல நேரங்களில்
கண்ணீருடன் கைகோர்த்து
கலங்கடித்து கதறவிடும் ...

இம்மாய நதியில்
நீந்தி கரை சேர்ந்தோர் எவருமில்லை...
தொடக்கம் முடிவு
திசை தூரம்
எதுவும் தெரியாமல்
இந்நதியிலே சங்கமித்து
மாண்டு போகும் மானுடம் ..

மாய நதியே
மானுட விதியே !!!!!

எழுதியவர் : குணா (9-Oct-18, 9:36 pm)
சேர்த்தது : வருண் மகிழன்
பார்வை : 90

மேலே