ஏய் பெண்ணே

ஏய்...பெண்ணே!!
மறுபடியும் என்
தெருவழியே என்னசொல்லி கூட்டி வருகிறாய் உன்
தோழிகளை....

உனக்கு தெரியுமா? நம்
பார்வைகள் உரசிக்கொண்ட
பட்டாம்பூச்சி படபடப்புகளால்
தூக்கம் இழந்தன என் இரவு பொழுதுகள்...
வாட்டி வதைத்தன பகல் நிமிடங்கள்...
ஆயிரம் முறை உன் முகத்தை வரைந்து
அழித்து பின் வரைந்து இறுதியில் தொலைத்துவிட்டது
என் மனம்...

உன் வருகைக்கான
நிமிட நிழல் நீளும் நேரத்தில்....

என்
விரல்கள் சிலவற்றின்
நக நுனிகளை இழந்துவிட்டேன்...
கலைந்த தலையை
கலைத்துவிட்டு வாரிக்கொண்டேன்...
பழகாத நபர்களை கூட
பேச்சு துணைக்கு நிறுத்தி வைத்தேன்...
தேவையில்லாது இரண்டு மூன்று முறை
தேநீர் அருந்திவிட்டேன்...
நொடிக்கொருமுறை வழியில் விழிவைத்து காணாது
நொந்துக் கொண்டேன்...

ஏய்...பெண்ணே!!
மறுபடியும் என்
தெருவழியே என்னசொல்லி கூட்டி வருகிறாய் உன்
தோழிகளை....

எழுதியவர் : அமுதன் (19-Oct-18, 9:31 pm)
சேர்த்தது : சிவா அமுதன்
Tanglish : EI penne
பார்வை : 736

மேலே