தங்கையின் பிரிவு
என் பதுமை மலர் தங்கைக்கு பாசமலர் அண்ணன் எழுதுவது...
நாம் சிரித்து பேசிய நாட்களைக் விட சண்டையிட்ட நாட்களே அதிகம்..... ஆனால்....
ஒவ்வொரு முறையும் நீயே வெற்றி பெறுவாய்... நான் விட்டுக் கொடுப்பதால்....
மனம் பிடித்த....
காதலனேயே கைபிடித்து காத்துக்கொண்டிருக்கிறார் என்னை கடந்து செல்ல.....
காகித ஓடமாய் மிதந்து கொண்டிருக்கிறேன் கண்ணீரில்....
இல்லை ஆனந்த கடலில்.....
உடலை விட்டு உயிர் பிரிவது துன்பம் என்றாலும் ஆனால் அதுவே எனக்கு ஆத்ம இன்பம்....
என்னை விட்டு உன்னை சேர்கிறாய்..
உள்ளம் உருகி வழிய வழி அனுப்பி வைக்கிறேன்.....
மணம் வீசும் மலர் தூவி மனமின்றி வழி அனுப்பி வைக்கிறேன்....
மாதம் ஒருமுறையேனும் வந்து போ...
சென்று வா என் சுவாச காற்றே!!!