கனவை நோக்கி ‌

கனவை நோக்கி ஓடும் மனிதர்கள் !
இலக்கை நோக்கி நகரும் பொழுதுகள் !
தோல்வியை கண்டு உடையும் நெஞ்சங்கள் !
வெற்றி கொள்ள விரைந்து ஓடுங்கள் !
நீ போகும் பாதையிலே நீ கற்கள் தடுக்கி வீழ்ந்தாலும் - உந்தன் கனவு என்றும் வீழாதே !
வாத்து போல வாழாதே !
நீ வானம் கண்டு மலைக்காதே !
கழுகை போல உயர பறந்திடு !
சிறுத்தை போல கால்கள் கொண்டிரு!
வெற்றி உன் வசமாகும் !
வெற்றி கண்டு வானம் பார்க்காதே !
தோல்வி கண்டு பூமி பார்க்காதே!
இரண்டும் சமநிலை - வெற்றிக்கு தோல்விதான் படிநிலை !
ஒவ்வொரு முறையும் தோர்க்கலாம் !
ஆனால் ஒருமுறை ஜெயிக்கலாம் !
அதனால் நாமும் சிரிக்கலாம் !
அதுவரை நாமும் அழைக்கலாம் !
யாவும் இங்கு சிறிது இல்லை !
சிரித்து செய்தால் பயமில்லை !
பயத்தை நீயும் கலைத்துவிட்டு - போரிட்டால் !
வெல்லலாம் !

எழுதியவர் : M. Santhakumar . (4-Nov-18, 1:04 pm)
சேர்த்தது : Santhakumar
பார்வை : 39

மேலே