வரிசையில் நையாண்டி மேளம் 2

வாட்ஸ்அப்பில்
தாய்மையைப் போற்றி விட்டு ;

முகனூலில்
யாவரையும் வாழ்த்திவிட்டு ;

நண்பருடன் கைபேசியில்
ஆரவாரமாய் சிரித்து விட்டு ;

என் அறைக்குப் புறப்பட்டேன்

நல்ல வேளை
ஞாபகம் வந்தது

பக்கத்தறையில் வயதான
தாய் காத்திருப்பில் ;

பேசி விட்டேன் -

அம்மா சாப்பிட்டீங்களா
அம்மா தூங்கலையா ?


********

எழுதியவர் : Dr A S KANDHAN (9-Nov-18, 9:45 am)
சேர்த்தது : Dr A S KANDHAN
பார்வை : 55

சிறந்த கவிதைகள்

மேலே