கவிதைக்கு ஒரு கவிதை

கவிதை என்பது ஒரு வகை தீராத காதல்
கவிதை என்பது ஒரு வகை உணர்வு
கவிதை இல்லையேல் கவிஞ்சன் இல்லை ..

சோகமானாலும் கவிதை
சுகமானாலும் கவிதை
காதல் வயப்பட்டாலும் கவிதை
காதல் தோற்றாலும் கவிதை
இறப்பானாலும் கவிதை
பிறப்பானாலும் கவிதை
நட்பு மலர்ந்தாலும் கவிதை
நட்பு பிரிந்தாலும் கவிதை
அழுகையிலும் கவிதை
ஆனந்தத்திலும் கவிதை
பெண்ணை புகழ கவிதை
பெண்ணை ஏச கவிதை
அறுவடைக்கும் எழுதினான் கவிதை
ஆசையை வெளியிடவும் கவிதை
வஞ்சத்திலும் கவிதை
வஞ்சி அவள் பேரழகை வருணிக்கவும் கவிதை
ஒற்றுமையில் வேற்றுமை காணவும் கவிதை
நம் உணர்வுகளை வெளிப்படுத்தவும் கவிதை
கவிதையும் கவிஞ்சனும் இல்லையேல் நாடு இல்லை
எல்லா மொழியிலும் கவிதையும் உள்ளது
கவிஞ்சனும் இருக்கிறான் ஆனால்
நம் தமிழ் மொழியில் உள்ள கவிதைகள் கவிஞ்சர்கள்
எழுதும் வரிகளிலே உணர்வும் உணர்ச்சிகளும்
நிரம்பி வழியும்...
.அது தான் நம் தமிழ் மொழியின் பெருமை!!..கவிதையின் அருமை !!

எழுதியவர் : பிரியா (12-Nov-18, 11:45 am)
பார்வை : 1092

மேலே