பெண்ணே என் காதல் கடிகாரம்

தேர்வு அறையில் கடைசி கால்மணி நேரம்...

*நீ அறியாமல் அமர்ந்த இடத்திற்கு பெயர்தான் அரியாசனமா?...
நீ என்ன அழகியா? அரசியா?

*தேர்வு அறையில் மதிப்பெண்ணை பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள்......
மதி பெண் உன்னைப்பற்றி தானா?...

*தேர்வு அறையில் கன்னத்தில் கை வைத்து அமர்ந்திருந்தாய் கட்டிய கை கடிகாரத்துடன்.....
அதை கண்ட பிறகுதான் சுழல்கிறது என் கடைசி கால் மணி நேர காதல் கடிகாரம்!!...

*நீ எனக்கு பரிசு எல்லாம் தர வேண்டாம் ஒரு பார்வை பார்த்துவிடு போதும் பரிட்சை அறையில்...

*என்னைப் போலத்தான் உன் விடைத்தாளைத் திருத்தும் கணினியும் குழம்பி விடப் போகிறது.....
நீ தவறாக எழுதிய விடை தான் சரியா என்று!!.....

*நான் முதல் வரிசையிலும் நீ கடைசி வரிசையிலும் தேர்வு அறையில் அமர்ந்திருந்தாய்....நீ தண்ணீர் குடிக்க வந்த போது தண்ணீர் என்னிடம் சொன்னது அவள் தண்ணீர் குடிக்க வரவில்லை உன் கண்ணுக்கு உயிர் கொடுக்க வந்தால் என்று.....

*நீ 200 கேள்விகளில் ஒரு கேள்விக்கு மட்டும் பதில் அளிக்கவில்லை.... அதே போலத்தான் இருந்தது என்னை கடைசியாக பார்த்துவிட்டு போன உன் பார்வையும்?....


நன்றி
#தீனா

எழுதியவர் : தீனா (13-Nov-18, 9:03 am)
சேர்த்தது : தீனா
பார்வை : 1779

மேலே