விதி

விதி இறைவனால் எழுதப் படுவதில்லை
உன்னுள் உன்னாலே எழுதப் பட்டதுதான் உன் விதி!
உன் எண்ணங்களின் பிரதிபலிப்பே-விதி !
நேற்றைய கற்பனை
இன்றைய செயல்பாடு
நாளைய ஏதிரொலி !
உண்டு என்று உளமார உணர்ந்தால் உண்டு வாழ்க்கை !
இல்லை என்று நினைத்தால் இல்லாது போகும் இன்ப வாழ்க்கை !
விதியை விதைப்பது நீயன்றோ!அதை
வெல்வது உன் எண்ணம் ஒன்றோ....!!
--கயல்

எழுதியவர் : கயல் (24-Nov-18, 3:43 pm)
சேர்த்தது : கயல்
பார்வை : 325

மேலே