என் இனிய பேரனே

என் இனிய பேரனே
ஈடு இணையில்லா
செங்கதிரோனே
உன் அன்னை
ஈர் ஐந்து மாதம்
மடியில் சுமந்தாள்
அவள் கருவறையில்
நீ நுழைந்த
நாள் முதல்
என் நெஞ்சில்
சுமந்தேன்
உன் ஜனனத்துக்காக
காத்திருந்தேன்
காத்திருத்தல் சுகமென
உணர்ந்தது அப்போதுதான்
நாள் காட்டியில்
குறித்திருந்தேன் உன்
வருகை நாளுக்காக
சொன்னபடி வந்தாய்
சொர்க்கத்தை காட்டினாய்
மடி தவழ வந்தவனே
விரல் பிடித்து உன்
மொழியை என்று
உதிர்ப்பாய்
உன் பொக்கைவாய்
சிரிப்பில்
உழன்று விட வைக்கிறாய்
உன் கன்னக் கதுப்பில்
மெல்ல முத்தம் ஈந்து
மேகமாய் உனை ரசிக்க
வான் நிலவாய் நீ
உன் பிஞ்சு பாதம்
என் மார்பில்
எட்டி உதைப்பதில்
பறிகொடுப்பேனடா
என் இதயத்தை!!!

எழுதியவர் : உமாபாரதி (24-Nov-18, 12:52 pm)
சேர்த்தது : உமாமகேஸ்வரி ச க
பார்வை : 102

மேலே