என் அன்பிற்குரியவளுக்கு எனது சிறிய அன்பளிப்பு

இலட்சியத்திற்காக
தொடங்கிய பயணம்
இல்லத்திலிருந்து
விலகி இருந்த தருணம்!

இலக்கை நோக்கி
பயணத்தில் இன்பம்
இருப்பினும் இமைமூடும்
நேரத்தில் தனிமைத்துண்பம்!

தனிமையின் தாக்கத்தினால்
தவித்திருந்த தருணத்தில்
தலைசாய்த்து தழுவிக்கொள்ள
தோள் தந்தாய் தோழி!

உள்ளம் முழுவதும்
உற்சாகத்தில் நிரம்ப
உணர தொடங்கினேன்
உன் உன்னதமான நட்பை!

விரக்தியுடன் கடந்து வந்த
என் நாட்களனைத்தும்
விரிந்த உன் நட்பால் என்னவோ
விடியலுக்காக காத்திருக்க தொடங்கியது!

தடுமாறி நின்றபோது
தோள்தட்டி தழுவினாய்
தவறிழைத்த நின்றபோது
தலைத்தட்டி திருத்தினாய்!

என் முகம் பார்தே
மனம் அறிந்தாய்
உன் முகம் மலர்ந்தே
சினம் தந்தாய்!

புன்னகையை உயர்த்தி
புலம்பலை கேட்டறிவாய்
புருவத்தை உயர்த்தி
"புசித்தாயா" என்ற புதிரும் போட்டறிவாய்!

அன்றொருநாள் கேள்வியில்
தொடங்கியது இன்றய நாள்
கவிதையாய்
தொடர்ந்தது நம் நட்பு!

அளவின்றி அன்பை
அள்ளி தந்தவளே
என் ஆயுள் முழுவதும்
அதை எதிர்பார்க்கிறேன் !

எழுதியவர் : மகா ராஜி (25-Nov-18, 1:29 pm)
சேர்த்தது : Raji
பார்வை : 546

மேலே