நல்ல துணிகூட மிச்சமில்லை…”

கருவாட்டைக்
காயவச்ச
சிறுவாட்டுக்
காசையெல்லாம்
புயல்கொண்டுப் போச்சே…
குதறப்பட்ட
தென்னங்கீற்றாய்
எம் உறைவிடமும்
ஆச்சே…
காரிருள்
நாளில்
ஏற்ற
ஒரு விளக்கும்
இல்லை…
”விலக்கு
நாளில்
வைக்க
நல்ல
துணிகூட
மிச்சமில்லை…”