நிஜத்தின் நேர்காணல்

சோலைக் குயில் கூவுகிறது
-----------சுகம் தரவில்லை !
மாலைத் தென்றல் வீசுகிறது
------------மனம் மகிழவில்லை !
வானத்து நிலவு பார்க்கிறது
------------காதலுக்கும் கவிதைக்கும் என்னிடம் வேலையில்லை
நிஜத்தின் நிர்த்தாட்சிண்யமான நேர்காணலை
-------------நித்தம் தரிசிக்கிறேன்
தோல்வியும் சோர்வும் துவள வைத்தாலும்
--------------முயற்சித் திருவீதியின் முகவரி தேடிப் போகிறேன்
--------------நித்தம் புதிது புதிதாகப் பிறந்து போராடுகிறேன் !

எழுதியவர் : கல்பனா பாரதி (2-Dec-18, 10:44 am)
சேர்த்தது : கல்பனா பாரதி
பார்வை : 453

மேலே