சலனங்கள்

பள்ளியில் படிக்கும் போது
துவிச்சக்கர வண்டியில் நீ
பாடசாலை செல்லும் வேகமும்
படிப்பில் நீ கொண்டிருந்த
அக்கறையும் ஆர்வமும்
நான் அறிந்து கொண்டேன்
அது ஏன் உன்னில் மட்டும்
எனக்கு அவ்வளவு அக்கறை
சீச் சீச் அப்படி பெரிதாய் ஒன்றும்
தோன்றவில்லை ,
ஆனால் ஏனோ மனம் மட்டும்
உன்னை காண்பதற்கு ஏங்குகிறது
என் அண்ணனுடன் நீ படித்ததாலே
ஏற்பட்ட பாசமா புரியவில்லை
நீ என்னை பார்க்கும் போதும்
ஒருவித சலனம் மனதில்
அது உன்னிலும் தென்பட்டது
நீயும் அதை பெரிதாய்
அலட்டிக் கொள்ளவில்லை ,
பள்ளிகளும் முடிந்து கல்லூரிகளுக்கு
தேறி விட்டோம்
பாதைகள் மாறிவிட்டது
பயணங்களும் மாறின ,
அதன் பின் சந்திக்கவோ சிந்திக்கவோ
நேரமில்லை ,
இருவர் பயணங்களும்
வேறு வேறு பாதைகளில்
ஆனால் இருவரின் மனங்களிலும்
சலனங்கள் மட்டும் மிஞ்சி விட்டது

எழுதியவர் : பாத்திமாமலர் (2-Dec-18, 11:13 am)
சேர்த்தது : பாத்திமா மலர்
பார்வை : 164

மேலே