பூணூல்

எனது வெண்ணிற பூணூல்
அழுக்கில்லை என்றாலும்
என்னை அழுக்காக்கி
கொண்டிருந்தது...
அது என் உணவுகளை
கண்டித்தது
என் நண்பர்களை
உறுத்தியது
என் வேலைவாய்ப்புகளை
நிராகரித்தது.
என் காதலை மறுத்தது
நதிபோல் தோள் சுற்றி
மௌனமாய் இருந்தாலும்
நிர்வாண மார்பில்
தவழும் அதன் பாஷை
பாசிசமென்று சொன்னார்கள்...
பழைய நூல் புடவையில்
என் தாயும்
அழுக்கு வேட்டியில்
நானும் நம்புகிறோம் நாங்கள்
இன்னும் இந்தியரென்று...

எழுதியவர் : ஸ்பரிசன் (2-Dec-18, 11:15 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 100

மேலே