என் வழி பயணம்
இதய ஊஞ்சலில் இடம்பிடித்தவனின்
வலமிருந்து..,
நிலம் பார்த்து தலை கவிழ்ந்தேன்...!
மலர் மாலையோடு மஞ்சள் கயிரும்..,
அதனோடு தனது உயிரும் சேர்த்து.,
உறவாய் கோர்த்தான்...!
எனக்காய் ஒருவன்..!
தொடங்கியது...,
அவன் வழியில் என் பயணம்...!
உதிரங்கள் ஒன்றாகி..,
உயிரொன்று கொண்டேன்...!
சில மாதம் உருண்டோடி..,
மதியாய் அவனைக் கண்டேன்...!
என்னால் ஒருவன்..!
தொடங்கியது...,
இவன் வழிக்காக என் பயணம்..!