மணிசோமனா ஜெயமுருகன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  மணிசோமனா ஜெயமுருகன்
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  12-Mar-2018
பார்த்தவர்கள்:  409
புள்ளி:  34

என் படைப்புகள்
மணிசோமனா ஜெயமுருகன் செய்திகள்
மணிசோமனா ஜெயமுருகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Nov-2018 11:47 pm

அப்பா வந்திடுவார்..!!!

இளைய அரசனே...,
இமைகள் மூடியே...,
இன்று தூங்கடா..,
நாளை வந்திடுவார்..!!!

உன் கண்கள் கக்கிடும்
கவிதை கோடியே...,
காண வந்திடுவார்..
அப்பா ஓடியே...!!!

உன் இதழ்கள் இசைத்திடும்...
மெல்லிசையும் கோடியே...,
இன்பம் கொண்டிடவே
இன்றே பறந்து வந்திடுவார்...!!!

உன் ஸ்பரிசம் நிரம்பிய
காற்று தூது சென்றிடும்..!!!
உன் தந்தை அவரையே
இங்கு இழுத்து வந்திடும்...!!!

அல்லி மலருனை..
அள்ளி அனைத்திட.
உன் அழகை ரசித்திட..
அப்பா வந்திடுவார்...!

அன்பு மிகுந்தவர்..
உன் அன்னை காதலன்..
அன்று சென்றவர்
இன்று திரும்பி வந்திடுவார்...!!!

அப்பா வரும்வரை
அம்மா இருக்கிறாள்
அயர்ந்து தூங

மேலும்

மணிசோமனா ஜெயமுருகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Dec-2018 6:12 pm

இதய ஊஞ்சலில் இடம்பிடித்தவனின்
வலமிருந்து..,
நிலம் பார்த்து தலை கவிழ்ந்தேன்...!
மலர் மாலையோடு மஞ்சள் கயிரும்..,
அதனோடு தனது உயிரும் சேர்த்து.,
உறவாய் கோர்த்தான்...!
எனக்காய் ஒருவன்..!
தொடங்கியது...,
அவன் வழியில் என் பயணம்...!

உதிரங்கள் ஒன்றாகி..,
உயிரொன்று கொண்டேன்...!
சில மாதம் உருண்டோடி..,
மதியாய் அவனைக் கண்டேன்...!
என்னால் ஒருவன்..!
தொடங்கியது...,
இவன் வழிக்காக என் பயணம்..!

மேலும்

மணிசோமனா ஜெயமுருகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Dec-2018 6:25 am

கட்டிலால் விளைந்த தொட்டில்...
அங்கு கொஞ்சி விளையாடுது ஒரு பிஞ்சு...
அன்பின் அரவணைப்பில்..!!!

மேலும்

மணிசோமனா ஜெயமுருகன் - கவின் சாரலன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Mar-2018 8:20 am

நேற்றையப் பொழுது கண்ணோடு
இன்றையப் பொழுது கையோடு
நாளையப் பொழுதும் உன்னோடு
நிழலாய் நடப்பேன் பின்னோடு ...

ஓடு ஓடு என்று சொல்லி நம்மை ஓடாமல்
நெஞ்சில் நிற்க வைக்கிறார் கவிஞர் .

கவிதை எதைப் பற்றி சொல்கிறது ? என்ன சொல்கிறது ?

மேலும்

வாலியின் மிகச் சிறப்பான காதல் பாடல்களில் இதுவும் ஒன்று . உண்மையில் தேனில் நனைந்த பலாச் சுளை . மிக்க நன்றி கவிப்பிரிய குமரி. 19-Mar-2018 10:19 pm
காதலனும் காதலியுமாக இருந்தால் "நாளைய பொழுதை" உறுதியாக கூற முடியாதல்லவா.! நடக்கலாம் நடக்காமலும் போகலாம்..! இது திருமணம் முடிந்து காதல் கொண்ட தலைவனும் தலைவிக்குமே கச்சிதமாக பொருந்தும்.! நேற்று - நினைவு இன்று - நிஜம் நாளை - கனவு முக்காலமும் இணையாக எக்காலமும் துணையாக தொடர்வதாக சொல்லபட்ட கவிதை வரிகள்.. கவிஞர்வாலி அவர்களின் வைரவரிகள்.. பல பாடல்களில் ஒன்று பலா பழத்தை போன்று.! 19-Mar-2018 9:19 pm
கற்பகம் படத்தில்தான் வாலி முதலில் எழுதினர். நான் குறிப்பிட்டிருக்கும் பாடல் SSR விஜயகுமாரி தோன்றும் காக்கும் கரங்கள் படப்பாடல் 17-Mar-2018 6:58 pm
இப்பொழுது சந்தங்களுடன் இன்னும் இனிமையாக இருக்கிறது . பாராட்டுக்கள் . 17-Mar-2018 6:42 pm
மணிசோமனா ஜெயமுருகன் - பெருவை கிபார்த்தசாரதி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
14-Mar-2018 1:21 pm

உலகமே அழுகிறது..!





சிரியா! சிரியா! சிரியா! சிறியதாயெங்கும்

..........சிறிய கோபத்துடன் சிணுங்கலான பேச்சு..!




உரிய அங்கீகாரம் மில்லா ராணுவத்தால்

..........உதயமாகும் தீவிர வாதமும் அங்குண்டு..!




பெரிய  மதக் கலவரத்தாலது சுருங்கியது

..........பச்சிளம் பிஞ்சுகள் தினம்பற்றி எரியுமாம்..!




பரிதாபமாகச் சீர்குலையும் சிறு நாட்டைப்

..........பார்த்து உலகமே அழுகிறது உண்மையாக..!


===============================================


 Thanks..picture:: google image      

மேலும்

தன் வேட்டி கிழிந்திருக்க எதிராளிக்கு பட்டு வேட்டியா? இங்கு ராணுவமில்லாமலே சாதி இளவட்டங்கள் ,அரசியல் இளவட்டங்கள் , மதத்தின் இளவட்டங்கள் ரவுடிகளின் இளவட்டங்கள் எனப் பலதுகளின் தொல்லைகளால் பலதரப்பட்ட மக்களும் பயந்தே வெளியில் உலவுகிறார்கள், மக்கள் உண்மை சுதந்திரத்தை முக்கியமாக தமிழர்கள் இன்னும் காணவில்லை. ஒருபக்கம் சைனா பாகிஸ்தானையும் இலங்கைகையையும் வளைத்து தாக்க நினைக்கிறது . சைனாவின் எண்ணம் நிறைவேறும்போது நம் கதியும் விரைவில் சிரியாவே. நமக்கிருக்கும் ஆபத்தை நினைத்து உஷாராயிருங்கள் தமிழர்களே.இப்படித்தான் இந்திரா காந்தி பங்களா தேசத்திற்கு பரிதாபப்பட்டார்கள். இன்று அங்கிருந்துதான் தினமும் நூற்றுக்கணக்கான பங்களாதேசிகள் நம் நாட்டிற்க்குள் ஊடுருவுகிறார்கள் . பல்லாயிரம் கோடிகளில் தினமும் கள்ள நோட்டுகள் நம் நாட்டிற்கு வருகிறது. இதைப்பற்றி சம்மந்தப்பட்டவர்கள் யாராவது கண்டுக்ல்கிரார்களா/ இல்லையே. மற்றநாட்டின் விவகாரம் நமக்கெதற்கு !!! கருத்துக்கு மன்னிக்கவும். 14-Mar-2018 2:47 pm

சுகமான சோகம்..
இன்பமான இம்சை..
செல்லமான சித்ரவதை..
வரமான சாபம்..
ஸ்வரமான கூச்சல்..

காகிதத்தின் கிறுக்கல்...
கிறுக்கல்களில் கவிதை...
கவிதையில் காதல்...
காதலில் வாழ்வு...

வாழ்வில் புதுமை...
புதுமையில் இனிமை...
இனிமையில் வளமை...
வளமையில் எளிமை...
எளிமையில் வலிமை...
வலிமையில் பொறுமை...
பொறுமையில் உண்மை...
உண்மையில் பெருமை...
பெருமையில் இளமை...
இளமையில் முதுமை...
முதுமையிலும் இளமை....!!!!

மேலும்

அருமை நட்பே! 20-Mar-2018 11:26 pm
மேலும்...
கருத்துகள்

மேலே