இரவின் மடியில்

உடல் வருந்தி உழைப்பவனும்
உறவு இழந்து துடிப்பவனும்
உணவு இல்லாமல் தவிப்பவனும்
தன்னை மறந்து உறங்கும்
வேளை இரவின் மடியே...../

கூவி எழுப்பும் சேவலும்
பாடி அழைக்கும் குயிலும்
ஓசை கொடுக்கும் ஆலைய மணிக்கும்
சற்று ஓய்வு கொடுக்கும் வேளை
இரவின் மடியே ...../

துயரம் தலை தூக்கும் போது
மழலை போல் நாமும் பெற்றவள்
மடி சாய்ந்து அயர்ந்து தூங்கையிலே
சொர்க்கம் ஆகும் அன்றைய
இரவின் மடியோ ...../

நோய் இன்றி துன்பம் இன்றி
கள்ளம் இன்றி கபடம் இன்றி
குற்ற உணர்வு இன்றி ஓலைக்
குடிசையில் உறங்கினாலும்
தூக்கம் வாரிக் கொடுப்பதோ
இரவின் மடியே ..../

போதையில் தள்ளாடுவோருக்கும்
உடல் விற்றுப் பிழைப்போருக்கும்
கொடியவை கொடுமையானவை
இந்தை இரவு வேளை என்பதே...../

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (6-Dec-18, 5:31 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
Tanglish : iravin madiyil
பார்வை : 148

சிறந்த கவிதைகள்

மேலே