ஆதங்கம்
வறண்ட மண்ணிலும்,/
விதையாய் முளையிட
துடிக்கின்றேன்/
பட்ட மரத்திலும்/
பூவாக மலர நினைக்கின்றேன் ./
கும்மிருட்டிலும் வெளிச்சம்,/
தேடி அலைகின்றேன் /
புயல் காற்றிலும் /
பூங் காற்றை தழுவ
ஆசை வைக்கின்றேன் ./
தீயினுள் பனிக்கட்டிதனை,/
பிடுங்க ஆவல் படுகின்றேன்/
மழைக்குப் பின், வரும் /
வான வில்லை வளைத்துப்,
போட துடிக்கின்றேன் /
சுனாமிப் பேரலைக்கே /
கடி 'வாளமிட்டு அடக்கிவைக்க
துள்ளுகின்றேன் /
பெற்றோரின் நல்லுரைகள்,/
ஆயிரம் கேட்டும் நகராத, /
எனக்குள் எத்தனை எத்தனையோ/
ஆமை போல் நகரும் கற்பனைகள் ./