அன்பில் மிகைத்தவள்
எனது அன்பை நீ அதீதமாக்குகிறாய்,
அந்த அதீத அன்பை வாங்குவதற்கு
என்னில் அன்பை நீ விதைக்கிறாய்...
என் அன்பெல்லாம் உன்முன் உருகுகிறது
உருகுமுன் நீ எனக்கு உன் அன்பை,
என் இதயத்தில் நிரப்பி விடுகிறாய் ...
நான் கேட்கும் போதெல்லாம்
உன்னை கையில் ஏந்தி கொடுக்கிறாய்..
என் கைகள் உன்னை அணைக்கும் போதெல்லாம்
என் நெஞ்சுக்குள் புகுந்து மறைகிறாய்...
பேசும் வார்த்தைகளின் உரிமை எடுக்கிறாய்,
பேசாத மௌனத்தின் போது உரிமை கொடுக்கிறாய் ..
கண்ணில் காட்டுவது காதலின் போதையை,
இதழில் காட்டுவது அமுதத்தின் போதையை
உன் பிரிவில் காட்டுவது அன்பின் போதையை ..
நீ கிட்ட இருக்கையில் எவ்வளவு அன்பை கொடுப்பாயோ
அதேயேதான் நீ எட்ட நிற்கையிலும் சமமாய் கொடுக்கிறாய் ..
நீ என் அன்பின் ராட்சசி..
நீ என்னை அன்பில் மிகைத்தவள் ..
நீ நீதான் ....