நண்பிக்கு வாழ்த்து மடல்

அறவினை என்னும் மரபினை கொண்டு
தவத்தினை வென்று ஊழ்வினை தொட்டு
பிறவினை இன்றி புகழினை தொட்ட
என் குழந்தைப்பிராய தோழியே

பிறந்தது நட்பு பெயர்இடம் அறியா
நிற்கிறது வளர்ந்து இடம்பெயரா
திரிபற்ற அன்புஈகை புரிதல் நிறைய
நித்தமும் நிதர்சனமாய்

நவதின தாண்டி கடைவரும் தசமியில்
அ-தி-சயம் ஆகி அர்த்தமும் ஆனீர்
ஈரெட்டும் கொண்டு ஈண்டு வாழீர்
சுற்றும் புவியில் எத்திசை புகினும்
மறவேல் நம் கெழுதகையை

எழுதியவர் : Ashok Kumar (29-Dec-18, 7:27 am)
சேர்த்தது : Ashok4794
பார்வை : 361

மேலே