விழுமியோர் பிறர்க்குறூஉம் வெங்குறை தீர்க்கிற்பார் – நன்னெறி 10

நேரிசை வெண்பா

தங்குறைதீர் வுள்ளார் தளர்ந்து பிறர்க்குறூஉம்
வெங்குறைதீர்க் கிற்பார் விழுமியோர் - திங்கள்
கறையிருளை நீக்கக் கருதா(து) உலகில்
நிறைஇருளை நீக்கும்மேல் நின்று. 10 - நன்னெறி

பொருள்:

நிலவானது தன்னிடமிருக்கும் கறையான இருளை நீக்கிக் கொள்வது பற்றி நினைக்காது, மேலே நின்று உலகில் படர்ந்திருக்கும் இருளைப் போக்கவே நினைக்கும்.

அது போலவே உயர்ந்தோரும் தன் குறை நீங்குதலை நினையாது, பிறர்க்கு உண்டாகிய கடும் துன்பத்திற்கு மனம் இளகி அவற்றைத் தீர்த்து வைப்பர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Jan-19, 8:13 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 428

மேலே