என்னவென்று அழைப்பது ?


என்னவென்றழைப்பது ?????

நீதி கேட்டுப் போராடும் ஓர் உயிர்

பன்னிரண்டு நாட்களாய்

கண்கள் பஞ்சடைந்து கிடப்பதை !!!!!!!!


தொலைக்காட்சித் தொடர்போல

பேசிப் பேசி பேசியே நீளும்

பாராளுமன்ற நாடகக் காட்சிகளை !!!!!!!!


இதை விழிகள் விரிய பார்த்துக் கொண்டு

'உச்' கொட்டிக்கொண்டோ ,

கோபமாய் விமர்சித்துக் கொண்டோ

உட்கார்ந்து கொண்டிருக்கும்

நம்முடைய நிலையை !!!!!!!!!!!!

என்னவென்று அழைப்பது ????????


பாரதியின் 'நெஞ்சு பொறுக்குதில்லையே'

அன்றும் ,இன்றும் ,என்றும் ........


எழுதியவர் : சித்ரா ராஜாசிதம்பரம் (27-Aug-11, 9:24 am)
சேர்த்தது : chithra rajachidambaram
பார்வை : 380

மேலே