chithra rajachidambaram - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  chithra rajachidambaram
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  21-Jul-2011
பார்த்தவர்கள்:  280
புள்ளி:  63

என் படைப்புகள்
chithra rajachidambaram செய்திகள்
chithra rajachidambaram - சுரேஷ்குமார் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Apr-2018 12:16 am

எழுத்து தளத்திற்க்கு எப்படி வந்து சேர்ந்தீர்கள்?

மேலும்

ஆர்வம் 31-May-2018 5:12 pm
கண்டிப்பாக உங்களை போன்றோர்கள் துணை உடன் ஈடேறும் . 28-May-2018 8:02 pm
உங்கள் சிறந்த எண்ணம் ஈடேர வாழ்த்துக்கள்.... 26-May-2018 7:45 pm
எண்ணங்களில் புரட்சியை தேட இங்கு வந்தேன் .அன்று ஒரு விடுதலை போராட்டம் வந்தது போல் இன்றும் ஒரு விடுதலை போராட்டம் வரவேண்டும் .ஆம் நம்மை இந்த கைபேசி ,தொலைக்காட்சி மற்றும் பல மனதை சோம்பேறியாக்கும் கருவிகளிடம் இருந்து விடுதலை பெற ஒரு புரட்சி மலர இங்கு வந்தேன் .பெண்களை தொலைக்காட்சியில் இருந்து ,கற்பனை வாழ்க்கையில் இருந்து வெளியே கொண்டுவர இங்கு நுழைந்தேன் .இதோ அது ஆரம்பம் ஆகி கொண்டு இருக்கிறது .நமக்கு என வாழாமல் பிறர்க்கு என வாழும் வாழ்க்கையை கற்று கொடுக்க இங்கு நுழைந்தேன் . 26-May-2018 6:52 pm
chithra rajachidambaram - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Apr-2018 11:34 am

கண்ணே ஆஷிபா
காஷ்மீரத்துக் கண்ணம்மா
எதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறாய்
இன்னும் நீ ??

எட்டு வயது உடலுக்குள் சிறைப்பட்டு
சிதைக்கப் பட்ட கதியற்ற சிறுபெண் இல்லை
இனி நீ ...
அகண்ட பிரபஞ்சத்தில் இணைந்து விட்ட
எல்லையில்லா சக்தி நீ ....

உன்னைத் துடிக்க வைத்த கயவர்களின்
தொடை பிளக்க எந்த
பீமனும் இங்கில்லை கண்ணே
கண்ணீர் சிந்தி
அறிக்கை விட்டு
குரல் எழுப்பி
விதம் விதமாய் இரக்கம் காட்டும்
எங்களையா நம்புகிறாய் நீ?

வழக்கமான ஒன்றுதானே கண்ணம்மா ?
உன் அக்கா தங்கைகள் எத்தனையோ பேரைக்
கயவர்கள் கையிலே காவு கொடுத்து விட்டுக்
கண்ணீர்க் கவிதைகளை சமர்ப்பித்து விட்டு
மறந்து விட

மேலும்

chithra rajachidambaram - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Sep-2015 9:41 pm

கரைந்து போக விழைகிறேன்

உன்னில் அடர்ந்திருக்கும்

அமைதியினூடே !

கலைந்து போக விழைகிறேன்

படர்ந்து திரியும்

மேகங்களோடு !

ஆழ்ந்து போக விழைகிறேன்

அசையாமல் தவமியற்றும்

மலைச் சிகரங்களோடு !

உருகிக் கலந்து ஓட விழைகிறேன்

உற்சாகக் கரைபுரளும்

நதியோடு நதியாக !

இயற்கையே உன்மடியில்

நான் இளைப்பாறும் கணங்களிலெல்லாம் .....

உன்னில் தொலைந்து போக விழைகிறேன் ...

மேலும்

நற்படைப்பு...! 27-Sep-2015 7:19 am
நல்லா இருக்கு !! இருந்தும் , எங்கயோ ஒரு சின்ன நெருடல் !! 26-Sep-2015 10:41 pm
chithra rajachidambaram - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Sep-2015 3:24 pm

நட்பே !

காரணமின்றி இங்கோர் காரியமும் இல்லை .
சோதனைகள்
நம்மைச் செதுக்கும் உளியே அன்றி
நொறுக்கும் சம்மட்டி அல்ல!.
சுழல் வரும்போது
மூழ்கி விடாமல்
கரைநின்று கவனி ..
கற்றுகொள் ..
திடமாவாய் ..வளர்வாய்
பின் நீ தேடாத வெற்றி கூட
நாடி வரும் ...அப்போதும் மூழ்காமல்
கவனி ...கற்றுக்கொள் ...
பயணம் இனிதாகும் !

மேலும்

chithra rajachidambaram - chithra rajachidambaram அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Sep-2014 1:47 pm

சுற்றிச் சுழன்று நகர்ந்து நடனமிட்டுக்
கொண்டிருந்த மேகக் கூட்டம் நிறுத்திக்
கேட்டேன் 'எங்கே பயணம்?'
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ....எங்கேயும் ..என்றன விகசிப்புடன்

இலக்கில்லையா? என்றேன் சற்றே நகைப்புடன் .
இலக்கும் இல்லை .
வேர்விடும் ஆவலும் இல்லை .
ஏன் என்ற கேள்வியும் இல்லை.
ஆனால் ஆனந்தமாய் அலைகிறோம் என
இயம்பின இயல்பாய் .

அட ....அப்படியானால் நீங்கள் யார் ?
வினவினேன் வியப்போடு
உ ற்றுப் பாருங்கள் ...நீங்கள்தாம் நாங்கள்
என்றார்கள் உறுதியைக் குரலிலேற்றி .
இடக்கோ? என்ற ஐயத்திற்குத் திரையிட்டு
எப்படி ?என்றேன் சற்று பணிவு கூட்டி!
திரை விலக்கி இடக்கில்லை இது மெய்தான்

மேலும்

நீரின்றி அமையாது உலகம் என்பது ஆன்றோர்கள் சொன்னது. நீரில்தான் முதல் ஜீவராசி பிறப்பெடுத்து வந்தது என்று சொல்கிறது அறிவியல்.. நீரின் வியாபகம்தான் பிரபஞ்சம் . இறுதியில் பிரளயம் என்பதும் நீர்தான் நீயும் நீர்தான் நானும் நீர்தான் . மேக குரு சொல்வது சரிதான். சிந்தனைப் பூர்வமான கவிதை வாழ்த்துகள் சகோதரி சித்ரா ராஜா சிதம்பரம் ------அன்புடன், கவின் சாரலன் 24-Oct-2014 10:27 pm
இலக்கில்லையா? என்றேன் சற்றே நகைப்புடன் . இலக்கும் இல்லை . வேர்விடும் ஆவலும் இல்லை . ஏன் என்ற கேள்வியும் இல்லை. ஆனால் ஆனந்தமாய் அலைகிறோம் என இயம்பின இயல்பாய் . ---------------------------------------அருமை அருமை. 24-Oct-2014 5:51 pm
பாராட்டுக்கு நன்றி 27-Sep-2014 8:37 am
மிக்க நன்றி . 27-Sep-2014 8:36 am
chithra rajachidambaram - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Jul-2015 8:57 am

வானுலகில் இப்போது
வெற்றிக் கொண்டாட்டம் !

மண்ணுலகிற்கு அனுப்பிய
இயற்கைக் கோள் ஒன்று
எண்பது ஆண்டுகளுக்கும் மேலாய்த்
தன் பணிகள் செவ்வனே ஆற்றிய பின்
வானிறங்கி விட்டதாம்
வெற்றிகரமாய் !!!!!!!!

வெற்றிமுழக்கம் கேட்கிறதா உங்களுக்கும் ?
பிரபஞ்சத்தின் செல்லப் புதல்வன் கலாமுக்கு .....ஜே !

மேலும்

chithra rajachidambaram - ஜின்னா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Feb-2015 1:50 pm

நான் தொலைத்த யாவற்றையும்
கண்டு பிடித்து தரும்
கருவியாக இருக்கிறாள்...

பயணம் புறப்படும் நேரத்தில்
நான் மறந்த எல்லாவற்றையும்
மறக்காமல் எடுத்து வைக்கிறது
அனிச்சை செயலாக
அவள் கைகள்...

எனக்கு தலைக்கனம் ஏறுவதை
தலைத்துவட்டும் சில கனங்களில்
அழித்து விட்டுப்போகிறாள்...

எவ்வளவு சுவைமிகுந்த வெளி உணவுகளையும்
எளிதில் மறக்கடித்து விடுகிறாள்
வெறும் மிளகு ரசத்தில்...

குழப்பத்தில் நான் தவித்து
கேள்விக்குறியாய் நிற்கும் நேரங்களில்
அன்பில் கொஞ்சம் நிமிர்த்தி
ஆச்சர்ய குறியாக்கி விடுகிறாள்...

தனிமையில் என்னோடிருக்கவே
தவமிருக்கிறாள்..
வார விடுமுறைக்காகவே
வரம் கேட்கிறாள்...

மேலும்

முன்பே இந்த கவிதையை படித்து ரசித்துள்ளேன்.அருமையாக உள்ளது. 16-Apr-2015 10:25 pm
மிக்க நன்றி தோழரே... தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல... 31-Mar-2015 12:36 pm
மனை+(வி)=மனைவி வாழ்த்துக்கள் ...நண்பா..கவிதை அருமை. 30-Mar-2015 8:41 pm
மிக்க நன்றி தோழரே.... வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல... கண்டிப்பாக உங்களால் முடியும்... எழுதுங்கள்.. வாழ்த்துக்கள் 23-Mar-2015 11:16 am
chithra rajachidambaram - chithra rajachidambaram அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Oct-2014 11:14 pm

விலகி நில்லாயோ மனமே

ஆர்ப்பரிக்கும் பிறவிக் கடலை
'நான்' கடந்து ,நான் கடக்க
எத்தனிக்கும் நீண்ட பயணத்தில்
துடுப்பாக உதவாமல்
இடையூறு செய்கிறாயே !
இது நியாயமா ?

ஆசை எனும் ஜாலம் காட்டி
மோசம் செய்கிறாய் !
கோபக் கனல் தூண்டி
தகிக்க வைக்கிறாய் !
ஐயத்தை ஏவிவிட்டு
அசைத்துப் பார்க்கிறாய் !
அழுக்காறு எனும் விஷவிதையை
விதைக்கப் பார்க்கிறாய் !

இந்த உடலல்ல நான்
மனமும் அல்ல
உள் உறையும் இறையருளைக்
கண்டுணர்ந்து இணைவதுவே
உயிரின் உயர் நோக்கம் என்றால்
இறைஞ்சுகிறேன் மனமே

நீ விலகி நில்லாயோ ?????

மேலும்

மிக மிக அருமை தோழியே .... 27-Mar-2015 3:28 pm
நன்றி . 18-Oct-2014 7:35 am
மிக்க நன்றி 18-Oct-2014 7:33 am
அருமை அருமை... 18-Oct-2014 12:13 am
chithra rajachidambaram - chithra rajachidambaram அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Sep-2014 1:47 pm

சுற்றிச் சுழன்று நகர்ந்து நடனமிட்டுக்
கொண்டிருந்த மேகக் கூட்டம் நிறுத்திக்
கேட்டேன் 'எங்கே பயணம்?'
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ....எங்கேயும் ..என்றன விகசிப்புடன்

இலக்கில்லையா? என்றேன் சற்றே நகைப்புடன் .
இலக்கும் இல்லை .
வேர்விடும் ஆவலும் இல்லை .
ஏன் என்ற கேள்வியும் இல்லை.
ஆனால் ஆனந்தமாய் அலைகிறோம் என
இயம்பின இயல்பாய் .

அட ....அப்படியானால் நீங்கள் யார் ?
வினவினேன் வியப்போடு
உ ற்றுப் பாருங்கள் ...நீங்கள்தாம் நாங்கள்
என்றார்கள் உறுதியைக் குரலிலேற்றி .
இடக்கோ? என்ற ஐயத்திற்குத் திரையிட்டு
எப்படி ?என்றேன் சற்று பணிவு கூட்டி!
திரை விலக்கி இடக்கில்லை இது மெய்தான்

மேலும்

நீரின்றி அமையாது உலகம் என்பது ஆன்றோர்கள் சொன்னது. நீரில்தான் முதல் ஜீவராசி பிறப்பெடுத்து வந்தது என்று சொல்கிறது அறிவியல்.. நீரின் வியாபகம்தான் பிரபஞ்சம் . இறுதியில் பிரளயம் என்பதும் நீர்தான் நீயும் நீர்தான் நானும் நீர்தான் . மேக குரு சொல்வது சரிதான். சிந்தனைப் பூர்வமான கவிதை வாழ்த்துகள் சகோதரி சித்ரா ராஜா சிதம்பரம் ------அன்புடன், கவின் சாரலன் 24-Oct-2014 10:27 pm
இலக்கில்லையா? என்றேன் சற்றே நகைப்புடன் . இலக்கும் இல்லை . வேர்விடும் ஆவலும் இல்லை . ஏன் என்ற கேள்வியும் இல்லை. ஆனால் ஆனந்தமாய் அலைகிறோம் என இயம்பின இயல்பாய் . ---------------------------------------அருமை அருமை. 24-Oct-2014 5:51 pm
பாராட்டுக்கு நன்றி 27-Sep-2014 8:37 am
மிக்க நன்றி . 27-Sep-2014 8:36 am
மேலும்...
கருத்துகள்

மேலே