prabhakarthik - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  prabhakarthik
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  23-Dec-2013
பார்த்தவர்கள்:  210
புள்ளி:  26

என் படைப்புகள்
prabhakarthik செய்திகள்
prabhakarthik - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Sep-2017 3:15 pm

தோழா.!!! தாயா? தாரமா? என்ற போட்டியில்... நீ ஒரு பக்கமாய் சாய்ந்ததால்.. இன்று உன் தோளில் சாய்ந்து நிற்கிது .. உன் குழந்தை தன் தாயை இழந்து....

மேலும்

prabhakarthik - Shyamala Rajasekar அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Nov-2016 12:48 pm

காத்திருந்த நேரமெல்லாம் கண்ணனுனைக் காணாமல்
பூத்தவிழி சோர்ந்துவிட புன்னகையும் மறந்ததடா !
சாத்திவிட்ட மனக்கதவைத் தட்டியெழுப்பி அணைப்பாயோ ?
ஆத்தாடி ! என்செய்வேன் ஐம்புலனும் தவிக்குதடா !

நித்தமுன்றன் நினைவாலே நெஞ்சமெல்லாம் கொதிக்குதடா
நித்திரையும் மறந்ததடா! நெக்குருக மாட்டாயோ ?
சுத்தமனத் தொடுன்னைச் சுற்றிவரு மென்னைநீ
பித்தாக்கி விடுவாயோ ? பிழையென்ன கண்டாய்சொல் !

தென்றலெனைச் சுட்டிடுதே செந்தேனும் புளித்திடுதே
கன்னலதும் கசந்திடுதே காதலுளம் கசிந்திடுதே
சின்னயிடைத் துவண்டிடுதே செவ்விதழும் உலர்ந்திடுதே
மன்னவனே வந்திடடா மனமுருக வேண்டுகிறேன் !

கால்கடுக்க நிற்கின்றேன் காத்திருப்பு

மேலும்

மனதை வசியம் செய்யும் காதலின் நினைவுகள் 18-Nov-2016 4:56 pm
prabhakarthik - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Mar-2016 5:50 pm

key board -க்கும் L board -க்கும் ஒரு வித்தியாசம் உண்டு .?????

button ஐ அடிச்சு அடிச்சு பழகினா அது key board .
பக்கத்துல உள்ள வண்டிய இடிச்சு இடிச்சு பழகினா அது ......... L board .

மேலும்

prabhakarthik - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Jul-2015 4:25 pm

குழந்தையின் சிரிப்பொலி
குதூகலமூட்டும் சிம்பொனி

தாயை நேசிப்பவர்
தமிழையும் நேசிப்பார்


தலைக்கவசம் அணியுங்கள்
தலையில் கேசம் இல்லை என்பதை மறைப்பதற்காவது

மின்னல் பறவையை மிதமாக ஓட்டுங்கள்
இல்லையேல் இன்னல் பறவை ஒன்று இடித்துவிட கூடும்

முந்தி செல்பவரே நீங்கள் முயலும் இல்லை
பிந்தி வரும் நான் ஆமையும் இல்லை

தாய்க்குப் பின் தாரம் மூன்றாவது ?
நடக்கும் சூரசம்காரம்

கனவை நனவாகும் முதல் முயற்சி
கலைப்பது தூக்கத்தை


வழிவிட்டு ஒதுங்குங்கள்
வருவது சூறாவளியின் சொந்தக்காரன்

மேலும்

தமிழை நேசிப்பவர் தாயையும் நேசிப்பார் --------------------இதன் மாற்று தாய நேசிப்பவர் தமிழையும் நேசிப்பார்.........என்பதானால் அது உண்மையில்லை! ஏனென்றால் பெரும்பாலான குடும்பங்களின் இன்றைய தாய்மாரே குழந்தைகள் ஆங்கிலப் பள்ளிகளில் கற்பதற்கும், தமிழை மறப்பதற்கும் காரணமாக உள்ளனர்... 'தமிழ்'' தமிழ்' என்று கூச்சலிட்ட திராவிடக் கட்சிகளின் தொண்டினால் , தமிழைக் கல்வி மொழியாக்கும் செயலில் அதே உத்வேகம் காட்டாத காரணத்தால் பலருடைய பிள்ளைகள் ஆங்கிலக் கல்வியையும் தாண்டித் தமிழை மட்டுமல்ல, தமிழ் நாட்டையும் விட்டு வெளியேறுவதில் அதிக சிரத்தை எடுத்துக்கொண்டுள்ளனர்.? சூறாவளி இனிமேல்தான் வேகம் பிடிக்க வேண்டும்...! 21-Jul-2015 1:52 pm
மிக நன்று வாழ்த்துக்கள் தோழமையே.!! (முற்சி-முயற்சி,சொந்தக்கரன்-சொந்தக்காரன்)கவனியுங்கள் தோழமையே 21-Jul-2015 12:45 pm
நல்லாருக்கு 20-Jul-2015 6:44 pm
prabhakarthik - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Jul-2015 11:35 pm

மணநாள் மட்டும் உடுத்திவிட்டு
மூலையில் முடங்கி கிடந்த
பட்டு சேலைக்கு கிடைத்த மறு ஜென்மம் !

கிண்ணத்தில் கரைத்த சந்தனம்
மங்கையின் கன்னத்தில் இடம்பிடிக்க ,

வண்ண வண்ண வளையல்களை வாங்கிக்கொண்ட
சொந்தங்களோ வரிசையில் இடம்பிடிக்க ,

எழுவகை சாதங்களும் எடுக்க எடுக்க
குறையாமல் எஞ்சி நிற்க ,

இரு கை நீட்டி அமர்ந்திருக்கும் கதாநாயகியின்
கைகளோ ஆனந்தத்தில் ஆர்பரிக்க !
நடக்கும் விழா வளைகாப்பு !

தாய் சேயின் நலம் காக்க நம் முன்னோர்
என்றோ கொளுத்தி எறிந்த மத்தாப்பு

மேலும்

prabhakarthik - cmvijay அளித்த போட்டியில் (public) கருத்து அளித்துள்ளார்

1.விஜய்பாரத்.காம் இணயதளத்தில் வேலைவாய்ப்பு (பரிசு பெருபவர்களுக்கு)
2.ஒரு காதலன் தன் காதலியை வர்ணிப்பது போன்று கவிதை அமைய வேண்டும்
3.உணர்ச்சி வசப்படும் அளவில் இருத்தல் நன்று
4.ஒப்புமை கவிதையாக இருக்கலாம்
5.கவிதை கவிதை மொழியில் இல்லாமல் கூட இருக்கலாம் அனால் புதியதாக இருத்தல் வேண்டும்
6. வேறு கவிதை ஒற்றோ அல்லது அதன் வழியிலோ கூடாது
7.புதிய சிந்தனைக்கு பரிசு நிச்சயம்

மேலும்

உங்கள் பெயரை கவிராஜாவுக்கு பதில் கவியரசன் என மாற்றிக்கொள்ளுங்களேன்.... 👌😊😊😊😄 16-Nov-2017 10:30 pm
தோழர்/தோழி Sureshraja J -க்கு... வணக்கம்! காதலியை வர்ணித்து கவிதை என்ற போட்டியில் நீங்கள் முதல் பரிசை வெற்றி பெற்றுள்ளமைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். Regards, Eluthu. 14-Jul-2016 11:11 pm
தோழர்/தோழி Sureshraja J -க்கு... வணக்கம்! காதலியை வர்ணித்து கவிதை என்ற போட்டியில் நீங்கள் முதல் பரிசை வெற்றி பெற்றுள்ளமைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். Regards, Eluthu. 14-Jul-2016 11:11 pm
தோழர்/தோழி Sureshraja J -க்கு... வணக்கம்! காதலியை வர்ணித்து கவிதை என்ற போட்டியில் நீங்கள் முதல் பரிசை வெற்றி பெற்றுள்ளமைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். Regards, Eluthu. 14-Jul-2016 11:11 pm
prabhakarthik - prabhakarthik அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Jul-2015 11:02 pm

கவிஞனின் கற்பனைக்குள் சிக்காத வார்த்தை நீ..........
ஓவியனின் தூரிகையும் அறிந்திடாத வர்ணம் நீ...........
பிரம்மனின் படைப்பினில் பிழைதிருத்தி பிறந்தவன் நீ.............
சிற்பியின் உளிகள் கூட தீண்டாது பிறந்த சிற்பம் நீ..............
இமைக்காது பார்த்துக்கொண்டே இருந்தால்............ என் கற்பனை முழுதும் கொட்டி தீர்த்துவிட செய்யும்
கலைஞன் நீ ...........
எப்போதும் மெய்மறந்து உனைத்
தொடரும் உன் ரசிகை நான்........
_ அம்மா

மேலும்

நன்றி சகோதரரே ! 17-Jul-2015 2:48 pm
நன்றி சகோதரரே! 17-Jul-2015 2:48 pm
தாய் எப்போதும் ரசிகைதான் தான் பெற்ற பிள்ளைக்கு... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 16-Jul-2015 3:01 am
அன்பின் முகங்கள் வரிகள் 15-Jul-2015 11:24 pm
prabhakarthik - ஜின்னா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Nov-2014 8:49 pm

ஏகாந்த இரவில்
ஏகாதிபத்திய இளமைக் குமுறலில்
சுய நினைவை இழக்கும்
சுய இன்பத்தின்
சில நொடிகளாய்....

விருப்பம் இல்லாமல்
விளக்கை அணைக்காமல்
வெட்கமும் படாமல்
ஒருதலைப் பட்சமாய்
உச்சகட்ட வேட்கையோடு
வேட்டையாடி தொடங்கி வைத்த
முதல் அரங்கேற்றத்தின்
கடைசி ஆட்டமாய்....

அமானுஷ்ய வேகத்தில்
ஆர்ப்பரிக்கும் மோகத்தில்
தணிக்க முடியா தாகத்தில்
விருப்ப மற்று உள்ளே சுரந்து
வீரியமற்று வெளியே கசியும்
வெள்ளை வியர்வைத் துளிகளாய்....

வயதை புறந்தள்ளி
விரட்டலாகாத விரக தாபத்தில்
பணத்தால் அமைக்கப் பட்ட
பஞ்சு மெத்தை கூடாரத்தில்
அற்ப பசியால் அடைக்கப்பட்ட
அடிமைக் காமத்தின் அகதிகளாய

மேலும்

உம் வார்த்தைக்கு வர்ணனை செய்ய வார்த்தை இல்லை!!! 10-Jul-2017 6:44 am
ஆழமான வார்த்தைகள் 02-Jul-2017 10:50 am
மெய்சிலிர்க்கும் படைப்பு தோழரே ஆணித்தனமான வரிகள் தோழரே 28-Mar-2017 9:24 am
எல்லா வரிகளும்.. மெய்சிலிர்க்கும் படியாக இருந்தது.. வாழ்த்துக்கள். நல்ல படைப்பை படித்தேன் என்ற .நிறைவுடன். 22-Sep-2015 2:09 pm
prabhakarthik - ஜின்னா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Feb-2015 1:50 pm

நான் தொலைத்த யாவற்றையும்
கண்டு பிடித்து தரும்
கருவியாக இருக்கிறாள்...

பயணம் புறப்படும் நேரத்தில்
நான் மறந்த எல்லாவற்றையும்
மறக்காமல் எடுத்து வைக்கிறது
அனிச்சை செயலாக
அவள் கைகள்...

எனக்கு தலைக்கனம் ஏறுவதை
தலைத்துவட்டும் சில கனங்களில்
அழித்து விட்டுப்போகிறாள்...

எவ்வளவு சுவைமிகுந்த வெளி உணவுகளையும்
எளிதில் மறக்கடித்து விடுகிறாள்
வெறும் மிளகு ரசத்தில்...

குழப்பத்தில் நான் தவித்து
கேள்விக்குறியாய் நிற்கும் நேரங்களில்
அன்பில் கொஞ்சம் நிமிர்த்தி
ஆச்சர்ய குறியாக்கி விடுகிறாள்...

தனிமையில் என்னோடிருக்கவே
தவமிருக்கிறாள்..
வார விடுமுறைக்காகவே
வரம் கேட்கிறாள்...

மேலும்

முன்பே இந்த கவிதையை படித்து ரசித்துள்ளேன்.அருமையாக உள்ளது. 16-Apr-2015 10:25 pm
மிக்க நன்றி தோழரே... தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல... 31-Mar-2015 12:36 pm
மனை+(வி)=மனைவி வாழ்த்துக்கள் ...நண்பா..கவிதை அருமை. 30-Mar-2015 8:41 pm
மிக்க நன்றி தோழரே.... வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல... கண்டிப்பாக உங்களால் முடியும்... எழுதுங்கள்.. வாழ்த்துக்கள் 23-Mar-2015 11:16 am
prabhakarthik - Shyamala Rajasekar அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Feb-2015 11:36 am

தவமோ தியானமோ தண்ணீ ரருகே
சிவந்தநிற நாரைகள் சேர்ந்து- துவமாய்
வலசைபோகக் கூட்டு வழிபாடோ சொல்வீர்
நலமாய்த் திரும்பிவா ரீர்

மேலும்

மிக்க நன்றி ! 21-Feb-2015 4:54 pm
அருமை அன்னையே 21-Feb-2015 4:34 pm
மிக்க நன்றி ! 21-Feb-2015 4:30 pm
அருமை தொடருங்கள் 21-Feb-2015 1:32 pm
மேலும்...
கருத்துகள்

மேலே