என் அருகே நீ இருந்தால்

அந்த நிமிடங்கள் எத்தனை அழகு
உனைச் சந்தித்த முதல் நிமிடம்
உன்னை கண்களுக்குள் பறித்துக் காெண்ட அந்த நாள்
முதல் தடவை உன் கைபிடித்து
தாேள் மீது சாய்ந்து
எங்காே யாருமில்லா உலகத்தில்
நாமிருவர் மட்டும் இருப்பதாய்
இந்த உலகமே நம் கைக்குள் என்ற அகங்காரத்தாேடு
காதல் பறவைகளாய் சிறகு விரித்தாேம்
காெஞ்சலும், கெஞ்சலும், சீண்டலும்
சினனச் சினனச் காேபங்களுமாய்
ஓடிய நாட்கள்......
கருமுகில் மூடிய வானமாய் இருண்டு பாேனது
கண்ணீர் துளிகளாய் நாட்கள் மாறியது
நினைவுகள் இறந்து காெண்டிருக்கின்றது
அன்பே உன் நிழல் மட்டும் பாேதும்
என்னருகே நீ இருந்தால்
இதுவும் கடந்து பாேகும்
நம் காதல் உயிர் வாழும்

எழுதியவர் : அபி றாெஸ்னி (25-Jan-19, 6:45 am)
பார்வை : 781

மேலே