செவ்வாய் கிரகத்திற்க்கு செல்வோம்

மூலதனதிடம்
முந்தானை இழந்து...
வெட்கமின்றி சுழல்கின்றாள்
உலகப்பெண்!

மானுட
சித்தாந்தகளிடம் சிக்கி
சிதைந்து போனது
அவள் மனம்!

சூரியனின் கதிர்கள்
சூழ்ச்சி செய்வதால்...
சூராவளியாய் சுற்றிதிரியும்
கார்மேக கூட்டம்!

வெற்றிடம் இருந்தால்
காற்றின் சுமை குறையலாம்!
வேறிடம் பெயர்ந்தால்
வேட்கைகள் வீழ்ந்து தனியலாம்!

தேடி நிலம் தேய்ந்து போய்
சிறிய வட்டம்
கூடுவிட்டு கூடுபாயும்
பெரியத் திட்டம்

செவ்வாய் கிரகத்திற்கு!

எழுதியவர் : ஆழிசரன் (9-Feb-19, 1:47 pm)
சேர்த்தது : ஆழிசரன்
பார்வை : 74

மேலே