நிரந்தரமா

தற்காலிகத் தஞ்சமாய்க்
கிளையில் தொங்கும்
நீர்த்துளிகள்..

கிடைத்த தருணத்தை
விடாத
மஞ்சள் மலர்கள்,
முகம் பார்க்கின்றன
நீர்த்துளி கண்ணாடியில்-
தற்காலிக இலவசங்களால்
தடம்மாறும் மனிதன்போல்..

சுடு கதிர்கள் காட்டிச்
சூரியன் வருகிறான்,
கதை முடிக்க..

நிரந்தரத்தின் முன்
தற்காலிகங்கள்
நிலைகெட்டுப் போவதுதான்
இயற்கையோ...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (4-Mar-19, 7:25 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 149

மேலே