நிரந்தரமா
தற்காலிகத் தஞ்சமாய்க்
கிளையில் தொங்கும்
நீர்த்துளிகள்..
கிடைத்த தருணத்தை
விடாத
மஞ்சள் மலர்கள்,
முகம் பார்க்கின்றன
நீர்த்துளி கண்ணாடியில்-
தற்காலிக இலவசங்களால்
தடம்மாறும் மனிதன்போல்..
சுடு கதிர்கள் காட்டிச்
சூரியன் வருகிறான்,
கதை முடிக்க..
நிரந்தரத்தின் முன்
தற்காலிகங்கள்
நிலைகெட்டுப் போவதுதான்
இயற்கையோ...!