பெண்ணே எழு
பெண்...
பெண் தான் இவள்...
ஆதியும் நீயே... சிவனின் பாதியும் நீயே..
உனக்குள் நீயே சிறை வைத்தது ஏன்?
அனைத்தும் அறிந்தும் விரலியாய் இருந்தது போதும்
உளியை கையிலெடு உனக்கான உலகை படைக்க
பரிகாசம் தேவையில்லை...
பரிதாபமும் தேவையில்லை...
துணிந்தே நில்!
நீயே உன் காவலன்..
இங்கே காணும் அனைத்தும் கானல் நீரின் மாயைகளே..
துணிவையும், கோபத்தையும் மையிட்டு மறைத்து கொண்டது போதும்..
இது உனக்கான வாழ்க்கை
கூர்வாள் தேவையில்லை உன் கண்களே ஆயுதம்...
துணியின்றியும் துணிந்தே நில்...