வழி தவறும் வாழ்வின் திறவுகோல்

உன் சிரிப்புக்கும் அழுகைக்குமான
திறவுகோலை அடுத்தவரிடம் கொடுத்துவிட்டு
பூட்டிற்கு திறவுகோல் இல்லையெனில்
வீட்டை திறப்பது எப்படி என்பதுபோல்
வாழ்வை திறக்க வழியின்றி
வருந்தும் வையகத்து மானிடரே
அன்பின் உரமிட்டு ஆத்தும செடிவளர்
பிரிகின்ற கிளைகளெல்லாம்
அடுத்தவர் அபகரிக்கா
பரிசுத்த திறவுகோல் படர்ந்துவிடும்

இப்போது நீ நினைத்தால் சிரி
நீ நினைத்தால் அழு
உன் வாழ்வு திறந்து நீ அங்கு இல்லாது போவாய்
மறந்தும் மற்றவனிடம் கொடுத்துவிடாதே
உன் வாழ்வின் திறவுகோலை
இல்லையேல் உன் சுயம் அழுகிவிடும்

எழுதியவர் : இளவல் (7-Mar-19, 12:47 pm)
சேர்த்தது : இளவல்
பார்வை : 94

மேலே