தாய்மை

உயிரில்
உயிர்த்துளி பெற்று
உயிருக்குள் உயிர்வளர்த்து
உயிர்நிலை பிளந்து
உதிரம் சிந்தி
உலகுக்கு உயிரை
உதிக்கும்
உன்னதம் தாய்மை...

முதியோர் இல்லத்தில்
ஏங்குகிறது இந்த தூய்மை
ஒருப்பிடி பாசத்துக்காக...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (8-Mar-19, 8:25 am)
Tanglish : thaimai
பார்வை : 105

மேலே