மகளிர் தினம்
மகளிர் தினம்
இந்த வார்த்தையை கூறுகையில்
மனதில் ஓர் மகிழ்ச்சி !
அவள் சுவர்களில் இருக்கும்
கிறுக்கல்கள் அல்ல
சுவடுகளில் சேர்த்து வைக்கப்பட வேண்டிய
சரித்திரம் - ஆனால்
நம் சமூகம் சரித்திரங்கள்
மீதுதான் சண்டையிடுகின்றனர் .......
வறண்ட பாலைவனத்தில் அரிதாய்
பூத்த பூ போல் இருக்கக்கூடாது
அவளின் சாதனை .......
நந்தவனம் போல் எல்லா இடங்களிலும்
மலர வேண்டும் அவள் சாதனை .....
அவள் விடியலுக்காக காத்திருப்பவள் அல்ல
சாதனைகளால் புதிய பல விடியலை உருவாக்குபவள்......
வலிகளை தளர்த்திவிட்டு - பல
வழிகளை தன்னுள் விதைப்பவள்!.....
அவள் விதைத்த வழிகளில்தான் - இன்று
நாம் பயணம் செய்கிறோம் .........
அவள் சரித்திரத்தின் ஒரு பக்கம்
மட்டுமே இன்றைய தினம் - ஆனால்
இது மட்டும் போதுமா ?
இன்னும் பல பக்கங்கள்
படிக்க ஆசைப்படுகிறேன் .............
இப்படிக்கு ,
இன்றைய மகளிர் தினம்