தனிமை தேவையில்லை
பிஞ்சுக்கரங் கொண்டிழுத்து
‘விளையாட வா’ வென்று
கொஞ்சும் மழலையரும்,
அஞ்சுவிரல், உள்ளங்கை
அனைத்தும் உணவளாவி
‘ஆக்காட்டு, ஆ’ எனலும்,
கோடி கொடுத்தாலுங்
கிட்டாது இப்புவியில்,
மட்டற் றிவையிருக்கத்
தனிமைநீ தானெதற்கு?
‘எட்டிப்போ! இப்போதே! ‘
✍️ தமிழ்க்கிழவி.
கோடி கொடுத்தாலுங்
கிட்டாது இப்புவியில்,
மட்டற் றிவையிருக்கத்
தனிமைநீ தானெதற்கு?
‘எட்டிப்போ! இப்போதே! ‘
✍️ தமிழ்க்கிழவி.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
