தமிழ்க்கிழவி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  தமிழ்க்கிழவி
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  07-Oct-2018
பார்த்தவர்கள்:  9530
புள்ளி:  158

என்னைப் பற்றி...

இயற்பெயர்: குகதர்சனி பாலசுப்பிரமணியம். வளர்ந்து வரும் தமிழ், ஆங்கிலக் கவிஞர்/ எழுத்தாளர்; தமிழ்/ஆங்கில மொழி/உரை பெயர்ப்பாளர்; இவை தவிர சிறு பராயம் முதல் நாடகம், நடனம், பண்ணிசை, வினாடி வினா, பேச்சு, கவியரங்கம், பட்டிமன்றம்... இத்யாதிகளில் பல பரிசில்களை வென்றதோடு கல்லூரியை நாடளாவிய போட்டிகளில் பிரதிநிதித்துவப் படுத்தியவள்; கல்லூரிக் காலத்திலும், பின்பும் நல்ல அறிவிப்பாளராகப் பெயர் பெற்றதுடன் அரச உத்தியோகத்தர்களுக்கு இடையிலான இலக்கிய நிர்மாணப் போட்டியில் கவிதை, சிறுகதை மற்றும் மொழி பெயர்ப்புக்கான பரிசில்கள் பெற்றவள்.

தமிழ்க் கிழவியின் கிறுக்கல்களுடன்தொடர்ந்து இணைந்திருங்கள். இக்குறிப்பைப் பார்வையிட்டமைக்கு நன்றி:).

இவ்வண், தமிழ்க்கிழவி

என் படைப்புகள்
தமிழ்க்கிழவி செய்திகள்
தமிழ்க்கிழவி - செல்வமுத்து மன்னார்ராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Jan-2020 6:25 pm

கருவிலே எனை கலைக்காதீங்க
தப்பித்து நான் பிறந்தால்
கள்ளிப்பால் கொடுத்து கொல்லாதீங்க..
உருவெடுத்து வளரும் முன்னே
எனை உருகுலைக்க நினைக்காதீங்க

ஏழை பொண்ணா நான் இருந்தா
ஏளனமா ஏசாதீங்க
குனிந்து வளைந்து வேலை செஞ்சா
காம பார்வை வீசாதீங்க

கல்வி கற்கும் காலத்திலே
காதலுக்கு மறுப்பு சொன்னா
அமில முட்டை வீசாதீங்க
என் முக அழகை கெடுத்து
எனை நடைப்பிணமா ஆக்காதீங்க…

வேலியே பயிரை மேயும் காலமிது
சிபியே புறா தின்னும் கொடுமை இங்கு
எங்கு போகும் பெண் புறாக்கள் தஞ்சம் தேடி
காம வல்லூறுகளை வேரறுங்கள் ஒன்று கூடி…


என்றென்றும் காப்போம் பெண் குழந்தைகளை…
.
கவிஞர் செல்வமுத்து ம

மேலும்

நன்றி 02-Jun-2020 8:29 am
அதில் உள்ளது என் தொலைப்பேசி எண்... 02-Jun-2020 7:57 am
என் சுயவிவரம் தளத்தின் முகப்பு பகுதியில் வெளியிட்டுள்ளேன்.. 02-Jun-2020 7:56 am
அய்யா மிக்க நன்றி என்னையும் கவிஞர் என்று அழைத்தமைக்கு. தங்களின் தொலைபேசி எண் கிடைக்குமா ? 02-Jun-2020 7:48 am
தமிழ்க்கிழவி அளித்த படைப்பில் (public) ileval5b6d527438b7b மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
29-Jan-2020 1:01 pm

வானமழை நானுனக்கு வளரும்பயிர் நீயெனக்கு
தேனமுது நானுனக்கு தீஞ்சுவையாய் நீயெனக்கு
ஊனமுறும் போதிலென்றன் ஊன்றுகோலு மாபவளே!
ஞானமிகு வாழ்கனவே! நல்ல மகவே! கண்ணம்மா!

நீட்டுகரம் நானுனக்கு, நிறைபொருளாய் நீயெனக்கு;
தேட்டமடி நானுனக்கு, திரவியமாய் நீயெனக்கு;
காட்டுமிடந் தோறு(ம்)நின்றன் கண்வழியே காண்பனடி!
பாட்டின் சுவையே! பளிங்கே! பழகுதமிழே! கண்ணம்மா!

வெள்ளியடி நானுனக்கு, வெண்மதியம் நீயெனக்கு;
பள்ளியடி நானுனக்கு, பாடமடி நீயெனக்கு;
கள்ளமறு நகையிலென்றன் கங்குல் களைபவளே!
வெள்ளைமனத்தோய்! வெகுளி! வேதப்பொருளே! கண்ணம்மா!

பாய்மரமாய் நீயெனக்கு, படகதுவாய் நானுனக்கு;
சேய்வரமாய் நீயெனக்கு, தாய்மடியாய் நானுனக்கு;

மேலும்

அருமை தோழி 17-Feb-2020 2:23 pm
பேரன்பும் நன்றியும் மன்னார்ராஜ் அவர்களே! 30-Jan-2020 3:02 pm
அழகான சிந்தனையில் அரும்பிய அழகிய வரிகள்... 30-Jan-2020 2:08 pm
செல்வமுத்து மன்னார்ராஜ் அளித்த படைப்பில் (public) selvamuthu மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
30-Jan-2020 8:39 am

காற்றோடு அசைந்தாடாமல்
காற்றுக்கு அசைந்து
முறிந்தும் மரத்திலிருந்து
விழாத ஒரு கிளையைப்போல்
உன் நினைவுகள் என்னோடு பயணிக்கின்றன
நீ இல்லாத இந்த நீண்ட
வாழ்க்கை பயணத்திலே...

மேலும்

உங்கள் கவிதை மனதை மயில் இறகு கொண்டு வருடியது போல் இருக்கிறது. வாழ்த்துக்கள். 03-Feb-2020 7:40 am
எங்களின் தாய்க்கவிஞரே தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி.. 31-Jan-2020 6:12 am
ஆங்கிலக் கவி ஆளுமைப்படைத்த கவிதாயினி தமிழ்க்கிழவி அவர்களுக்கு மிக்க நன்றி... 31-Jan-2020 6:08 am
கருத்திற்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி கவிஞனின் கவிஞரே... 31-Jan-2020 6:05 am
தமிழ்க்கிழவி - நா சேகர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Jan-2020 7:01 am

காட்சிகள் பிழையாவதில்லை
பகலில்

காட்சிப்பிழை சகஜம் இருளில்

காட்சியே பிழையானது உன்
வகையில்

காட்சி பிழையாய் தங்கிவிட்டது
என்மனதில்

மேலும்

நன்றி உறவே 30-Jan-2020 4:18 pm
வரிகள் அருமை சகோ 30-Jan-2020 1:00 pm
தமிழ்க்கிழவி - தமிழ்க்கிழவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Jan-2020 1:01 pm

வானமழை நானுனக்கு வளரும்பயிர் நீயெனக்கு
தேனமுது நானுனக்கு தீஞ்சுவையாய் நீயெனக்கு
ஊனமுறும் போதிலென்றன் ஊன்றுகோலு மாபவளே!
ஞானமிகு வாழ்கனவே! நல்ல மகவே! கண்ணம்மா!

நீட்டுகரம் நானுனக்கு, நிறைபொருளாய் நீயெனக்கு;
தேட்டமடி நானுனக்கு, திரவியமாய் நீயெனக்கு;
காட்டுமிடந் தோறு(ம்)நின்றன் கண்வழியே காண்பனடி!
பாட்டின் சுவையே! பளிங்கே! பழகுதமிழே! கண்ணம்மா!

வெள்ளியடி நானுனக்கு, வெண்மதியம் நீயெனக்கு;
பள்ளியடி நானுனக்கு, பாடமடி நீயெனக்கு;
கள்ளமறு நகையிலென்றன் கங்குல் களைபவளே!
வெள்ளைமனத்தோய்! வெகுளி! வேதப்பொருளே! கண்ணம்மா!

பாய்மரமாய் நீயெனக்கு, படகதுவாய் நானுனக்கு;
சேய்வரமாய் நீயெனக்கு, தாய்மடியாய் நானுனக்கு;

மேலும்

அருமை தோழி 17-Feb-2020 2:23 pm
பேரன்பும் நன்றியும் மன்னார்ராஜ் அவர்களே! 30-Jan-2020 3:02 pm
அழகான சிந்தனையில் அரும்பிய அழகிய வரிகள்... 30-Jan-2020 2:08 pm
தமிழ்க்கிழவி - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Jan-2020 1:01 pm

வானமழை நானுனக்கு வளரும்பயிர் நீயெனக்கு
தேனமுது நானுனக்கு தீஞ்சுவையாய் நீயெனக்கு
ஊனமுறும் போதிலென்றன் ஊன்றுகோலு மாபவளே!
ஞானமிகு வாழ்கனவே! நல்ல மகவே! கண்ணம்மா!

நீட்டுகரம் நானுனக்கு, நிறைபொருளாய் நீயெனக்கு;
தேட்டமடி நானுனக்கு, திரவியமாய் நீயெனக்கு;
காட்டுமிடந் தோறு(ம்)நின்றன் கண்வழியே காண்பனடி!
பாட்டின் சுவையே! பளிங்கே! பழகுதமிழே! கண்ணம்மா!

வெள்ளியடி நானுனக்கு, வெண்மதியம் நீயெனக்கு;
பள்ளியடி நானுனக்கு, பாடமடி நீயெனக்கு;
கள்ளமறு நகையிலென்றன் கங்குல் களைபவளே!
வெள்ளைமனத்தோய்! வெகுளி! வேதப்பொருளே! கண்ணம்மா!

பாய்மரமாய் நீயெனக்கு, படகதுவாய் நானுனக்கு;
சேய்வரமாய் நீயெனக்கு, தாய்மடியாய் நானுனக்கு;

மேலும்

அருமை தோழி 17-Feb-2020 2:23 pm
பேரன்பும் நன்றியும் மன்னார்ராஜ் அவர்களே! 30-Jan-2020 3:02 pm
அழகான சிந்தனையில் அரும்பிய அழகிய வரிகள்... 30-Jan-2020 2:08 pm
தமிழ்க்கிழவி - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Apr-2019 8:44 am

தம்பி நீ வந்திடடா...😞
------------------------
ஒரு நல்ல
நாளதனில்
உறவுகளும்
உறுநட்பும்
உனைவாழ்த்தச்
சிறுதொட்டில்
தனிலிட்டுன்
சின்னஞ்
சிறுகாதில்
தருபெயர்
ஓதுமந்தத்
திருநாளும்
வருமென்றே
காத்திருக்க...

பிஞ்சுமுகங்
காட்டி
அஞ்சுசிறு
விரல் ஆட்டிப்
பஞ்சனைய
காலுதைப்பாய்,
‘குஞ்சு’ ‘ராசா’
எண்டு நாங்கள்
கொஞ்சிக் குலவி,
கொஞ்சம்
இஞ்சை வாவெண்டு
கெஞ்சி மடியேந்தக்
குறுநகை கூட்டிக்
களிசேர்ப்பாய்
என்றுவிழி பூத்திருக்க...

அன்னையர்
தினமதிலுன்
அன்னையையும்
வாழ்த்தாமல்
என்னதான்
அவசரமோ?
எமையெலாம்
அகன்றெங்கே
பறந்தனையென்
சின்ன மருமகனே

உடைந்துருகும்
உந்தைக்கும்,
உனைச் சுமந்த
உந்தியதன்
இன்மையிலே
உலையாய்
உளங்கனல

மேலும்

நன்றிங்க 🙏🏾 08-Apr-2019 11:22 pm
நன்றிங்க 🙏🏾 08-Apr-2019 11:22 pm
நன்றிங்க 🙏🏾 08-Apr-2019 11:22 pm
அழகான நடையில் எழுதியுள்ளீர்கள். மிகச் சிறப்பு. 02-Apr-2019 6:32 pm
தமிழ்க்கிழவி - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Mar-2019 3:46 am

பாவ மூட்டைகளின் பாரமோ
பாவம் மூச்சுத் திணறுகிறாள்
கங்கை

~ தமிழ்க்கிழவி🌷.

மேலும்

நன்றி சகோ🙏🏾 27-Mar-2019 9:48 pm
அருமை அருமை... இன்னும் நல்ல வரிகளை எதிர்பார்க்கிறேன்... கவிதை என்பது உடல் போல் அதில் உயிர் என்பது கற்பனை, அத்தகைய கற்பனைமிக்க கவிதைகளை எழுத வேண்டும் என விரும்புகிறேன்.... 27-Mar-2019 5:51 am
தமிழ்க்கிழவி - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Mar-2019 6:27 pm

வெளியே குதிரை கனைத்தது. அழைப்பை இனங்கண்டு கொண்ட கலேரி வீட்டுக்கு வெளியே ஓடினாள். குதிரை அவளது பெற்றோரின் கிராமத்தில் இருந்து வந்திருந்தது. அது தான் தன் தந்தையின் வீட்டுக்குச் செல்லும் கதவே போல, அதன் கழுத்தில் தலை சாய்த்தாள் அவள்.

கலேரியின் பெற்றோர் சம்பாவில் வாழ்கின்றார்கள். சம்பா, உயர் நிலத்தில் அமைந்துள்ள அவளது கணவனின் கிராமத்தில் இருந்து சில மைல்கள் தொலைவில் உள்ளது. பாதையானது தாழ் நிலத்தை நோக்கி வளைந்து நெளிந்து இறங்கிச் செல்லும் இந்த இடத்தில் இருந்து பார்த்தால், நீண்ட தூரத்தில் இருக்கும் சம்பா காலடியில் பரந்து விரிந்து கிடப்பது போல் தோன்றும். பிறந்த வீட்டு நினைவு வரும்போதெல்லாம் கலேரி

மேலும்

அப்பெருமை, மூலக்கதாசிரியர் அம்ரிதா ப்ரிதம் அவர்களையே சாரும். இயன்றளவு முயன்று தமிழில் அதே உயிரோட்டத்தை வெளிக்கொணர்ந்து உள்ளதாய் நம்புகிறேன், பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி:) 27-Mar-2019 3:43 am
அருமையான கதையம்சம் .... 26-Mar-2019 10:31 am
தமிழ்க்கிழவி - தமிழ்க்கிழவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Mar-2019 12:00 am

திருக்குமரன் அவர்கள் யாழ் இந்துக் கல்லூரியின் கவிதைப் பரம்பரையில் முருகையன், செங்கை ஆழியான், ஜெயசீலன், முகுந்தன் இவர்தம் வரிசையில் வந்த ஈழத்துக் கவிஞர், எழுத்தாளர் மற்றும் சுதந்திர ஊடகவியலாளர் ஆவார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். இலங்கையில் தொலைக்காட்சியிலும் பத்திரிகையிலும் ஊடகராகவும் அமைச்சில் அதிகாரியாகவும் பணியாற்றியவர்.

திருக்குமரன் கவிதைகள்(2004), விழுங்கப்பட்ட விதைகள்(முதல் பதிப்பு: 2011, இரண்டாம் பதிப்பு:2015), தனித்திருத்தல்(2014) ஆகிய கவிதைத் தொகுப்புகளும், சேதுக்கால்வாய்த் திட்டம் (ராணுவ,அரசியல்,பொருளாதார, சூழலியல் நோக்கு) எனும் ஆய்வுநூலும்(2006) அவரது படைப்புக்க

மேலும்

தமிழ்க்கிழவி - தமிழ்க்கிழவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Feb-2019 5:53 pm

அஞ்சன மைவிழிகள்அஞ்சிடுவ தேனோ?கொஞ்சுங் கொலுசார்க்கமஞ்சம்வர நாணோ?~

மேலும்

மேலே கவின் அவர்களுக்களித்த பதிலில் உள்ள முத்தொள்ளாயிரம் பாடலையும் பாருங்கள் வாசவன் அவர்களே... நன்றி. 27-Feb-2019 11:58 pm
தங்கள் வரிகள் அழகு, கவிப்பிரிய கவின் அவர்களே! நாண் என்பதற்கு நாணம் ஒத்த பதம் என்று தமிழிலக்கியத்தில் பயின்றுள்ளேன்...அன்றேல் அவ்விதம் ஓசைக்காக மட்டும் எழுத மாட்டேன்:), முத்தொள்ளாயிரத்தில் பாண்டியன் 83 பாடலைச் செங்கைப் பொதுவன் அவர்களின் உரையோடு கீழே காணலாம்: மாணார்க் கடந்த மறவெம்போர் மாறனைக் காணாக்கால் ஆயிரமும் சொல்லுவேன் – கண்டக்காற் பூணாகந் தாவென்று புல்லப் பெறுவேனோ நாணோ டுடன்பிறந்த நான். – 83 மாணார்க் கடந்த மற வெம் போர் மாறனைக் காணாக்கால் ஆயிரமும் சொல்லுவேன் கண்டக்கால் பூண் ஆகம் தா என்று புல்லப் பெறுவேனோ நாணோடு உடன்பிறந்த நான். மாட்சிமை இல்லாதவர்களை வென்றவன் மாறன். அவனைக் காணாதபோது ஆயிரம் ஆயிரமாகப் பேசுவேன். கண்டால், “உன் பூண் அணிந்த மார்பை எனக்குக் கொடு” என்று கேட்டுத் தழுவமுடியுமா? நாணத்தோடு பிறந்தவள் ஆயிற்றே! நன்றி. 27-Feb-2019 11:33 pm
நாணோ எப்படி நாணமோ ஆகும் . ஓசை வேண்டின் இப்படி எழுதலாமே --- அஞ்சன மைவிழிகள் அஞ்சிடுவ தேனோ? கொஞ்சுங் கொலுசார்க்க மஞ்சம்வர நாணம் ஏனோ ? அன்பு விழியில் மானே அழகு இதழில் தேனே ? -----உங்கள் ஓசை விருப்பினை பாராட்டுகிறேன். ஆனால் பொருள் சிதையக் கூடாது . 27-Feb-2019 7:33 pm
நன்றி தமிழ்ப்பிரிய கவின் அவர்களே! ஓசை கேட்டெழுதுபவள் என்பதால் ஏனோ -நாணோ என்று முடித்தேன். பொருள் ஒன்று தானே:) 27-Feb-2019 7:15 pm
தமிழ்க்கிழவி - தமிழ்க்கிழவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Feb-2019 4:05 pm

மாற்றம் ஒன்றே மாறாது மற்றெல்லாம்
தோற்றம் மறைவு உடைத்து
~ தமிழ்க்கிழவி

மேலும்

ஆமாம் பிரியா:) 26-Feb-2019 5:05 pm
உண்மை.. 26-Feb-2019 3:07 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (22)

கோவலூர் த.வேலவன்.

கோவலூர் த.வேலவன்.

திருகோவிலூர்
செல்வமுத்து மன்னார்ராஜ்

செல்வமுத்து மன்னார்ராஜ்

கோலார் தங்கவயல் - KGF
நன்னாடன்

நன்னாடன்

நன்னாடு, விழுப்புரம்
user photo

பசுபதி

புதுச்சேரி

இவரை பின்தொடர்பவர்கள் (24)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
அஷ்றப் அலி

அஷ்றப் அலி

சம்மாந்துறை , இலங்கை
நதி பாலா

நதி பாலா

சேலம்
மேலே