நம்பிக்கை

கல்லைக் கடவுள் சிலையாக்கி
கோவில் கட்டினோம் நிலையாக்க,
எல்லை யில்லா அருள்பெறவே
எடுத்துக் கருவறை வைத்ததையே
எல்லா நாளும் பூசைசெய்ய
ஏற்க வைத்தோம் அர்ச்சகரை,
கல்லில் கடவுள் நம்பிக்கைதான்
கோவில் அர்ச்சகர் ஆசியுமே...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (18-Mar-19, 7:07 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : nambikkai
பார்வை : 513

மேலே