அவள் கற்பு இன்னும் களவு போகவில்லை

அவள் கற்பு இன்னும் களவு போகவில்லை.......

ஆண்மையின் பலப்பரீட்சைக்கு ஆடுகளமானவள் அவள்....
காம சூத்திரம் கற்க ஆய்வுக்கூடமானவள் அவள்....
பலர் காமக்கனலுக்கு பொசுங்கிப்போன கானகம் அவள்....
பல விரக தாபத்திற்கு வற்றிப்போன தடாகம் அவள்.....

பல மன்மதர்கள் அவளைப் புரட்டிப் புரட்டிப் படித்து
முனைவர் பட்டம் பெற்றனர்...
அவளோ அட்டை கிழியப்பட்டு பக்கங்கள் கசக்கப்பட்டு
அலங்கோல அகதியானாள்.....

பருவ மழையும் பருவம் தப்பிய மழையும்
அவளுள்ளும் பொழிகிறது தொடராய்...
வக்கிரப் பசிக்கு விருந்தளித்த அவள் தேகம்
உக்கிரமாய் பசியாறத் துடிக்கிறது ஒருநேச இதயம் தேடி....

அவள் கற்பு இன்னும் களவு போகவில்லை....

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (27-Mar-19, 12:22 pm)
பார்வை : 179

மேலே