உன் செம்பொழிவை

காரை தருகின்ற கருமேகமே
காணமல் தற்போது போனதேனோ
செய்யாத செயலை செய்ததாய் கூறும்
செப்படி வித்தை மாந்தராய் மாறியது ஏனோ
பேரெழில் அறிவு கொண்ட பெண்டிரெல்லாம் - தம்
பெருமாற்றல் அறியாது வாழ்வது போலே
சீர்மிகு பிறப்பெடுத்த கார்முகிலே
நேர்பட பொழியாதது நியாயம் தானோ
ஆல் முதல் அணுவின் சேல் வரை உள்ள வாழ்க்கை
உன் செம்பொழிவை சார்ந்து தான் என்பதை
சிறிதும் அறியாது மாறியது ஏனோ
மரம் செடி கொடி நட்டு உன்னை அழைக்க - இன்று
மருந்தளவேனும் பொழிவை நீ தருவாய் தாயே!
--- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (28-Mar-19, 12:28 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 100

மேலே